Don't Miss!
- Finance களையெடுக்க வரும் மத்திய அரசு.. ஜியோ, ஏர்டெல் உடன் கூட்டணி..OTP மோசடி-க்கு முடிவு..!!
- Sports தோனியை ரொம்ப நம்பாதீங்க! இதுக்கு மேல் ஏதும் செய்ய முடியாது! சிஎஸ்கே பயிற்சியாளர் பிளமிங் கருத்து
- News குரு வந்தால் கோடியில் கொடுப்பார்.. ஆனால் ஒரு சிக்கல்! ரிஷப ராசிக்கு குரு பெயர்ச்சி எப்படி இருக்கும்?
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- Automobiles ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
- Technology SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ரூ. 40 கோடியை வேண்டாம் என்று சொன்ன விஜய்
மும்பை: நடிகர் விஜய் தேவரகொண்டா ரூ. 40 கோடி பட வாய்ப்பை ஏற்க மறுத்துள்ளார்.
விஜய் தேவரகொண்டா, ரஷ்மிகா மந்தனா நடிப்பில் கடந்த மாதம் 26ம் தேதி வெளியான டியர் காம்ரேட் தெலுங்கு படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படம் தள்ளிப் போய் தள்ளிப் போய் ஒரு வழியாக ரிலீஸானது.
இந்நிலையில் அந்த படத்தின் இந்தி ரீமேக் உரிமையை பிரபல பாலிவுட் இயக்குநரும், தயாரிப்பாளருமான கரண் ஜோஹார் ரூ. 6 கோடி கொடுத்து வாங்கியுள்ளார். முன்னதாக விஜய் மும்பைக்கு சென்று கரண் ஜோஹாரை சந்தித்து பேசினார்.
அப்பொழுது கரண் டியர் காம்ரேட் படத்தை பார்த்தது மட்டும் அல்லாமல் விஜய்யை பாலிவுட்டில் அறிமுகம் செய்து வைக்க விரும்பி நீங்களே ரீமேக்கில் நடித்துவிடுங்களேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் ரூ. 40 கோடி சம்பளம் தருவதாகவும் கரண் ஜோஹார் விஜய் தேவரகொண்டாவிடம் தெரிவித்தாராம்.
இதையாவது கண்டிப்பீங்களா? இல்ல எனக்கும் நடந்திருக்குன்னு எஸ்கேப் ஆயிடுவீங்களா கமல்?
எத்தனை கோடி கொடுத்தாலும் ரீமேக்கில் நடிக்கும் ஐடியா இல்லை என்று கூறிவிட்டாராம் விஜய். முன்னதாக அர்ஜுன் ரெட்டி இந்தி ரீமேக்கான கபிர் சிங்கில் நடிக்க விஜய்க்கு வாய்ப்பு கிடைத்தது. ஒரே கதாபாத்திரத்தில் மீண்டும் நடிக்க விருப்பம் இல்லை என்று கூறிவிட்டார் அவர்.
கபிர் சிங் படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டாகியுள்ளது. ஆனால் அந்த படத்தை விஜய் தேவரகொண்டா பார்க்கவில்லை. ஏன் பார்க்கவில்லை என்று கேட்டதற்கு, தெரிந்த கதை தானே அதை போய் மறுபடியும் என்னத்த பார்க்க என்று கேட்டு அதிர வைத்தார்.
இந்தி படங்களில் நடிப்பது குறித்து விஜய் தேவரகொண்டா கூறியதாவது,
இந்தி படங்களில் நடிப்பது சுவாரஸ்யமானது தான். ஆனால் தெலுங்கு மற்றும் இந்தி என்று இரு தரப்பு ரசிகர்களுக்கும் ஏற்ற வகையில் ஏதாவது செய்ய வேண்டும். ஹைதராபாத்தில் இருந்து மும்பைக்கு வந்து அபார்ட்மென்ட்டில் தங்க எனக்கு இஷ்டமில்லை. என் நண்பர்கள் ஹைதராபாத்தில் தான் உள்ளனர்.
மும்பையில் வாழ்க்கை ரொம்பவே வேகமாக உள்ளது. எனக்கு அது ஒத்து வராது என்று தெரிவித்துள்ளார்.
-
என்னை அரசியலுக்கு வரவிடாதீங்க.. நீங்க நல்லது செய்யுங்க.. நான் நடிச்சுட்டு போய்டுவேன்.. விஷால் பேட்டி!
-
13 வருடங்களாக காதலித்துவரும் கீர்த்தி சுரேஷ்?.. இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு.. ரசிகர்கள் கேள்வி
-
Ghilli movie: 20 வருஷம் கழித்து நிறைவேறிய கில்லி அம்மாவின் ஆசை.. இன்னா குத்து குத்துறாங்க!