லைகர் இந்தியில் வெளியாவதில் சிக்கல்..யார் தடுப்பார்கள் என்று பார்க்கிறேன்.. விஜய் தேவரகொண்டா ஆவேசம்!
மும்பை : விஜய்தேவரகொண்டாவின் லைகர் திரைப்படம் இந்தியில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
Recommended Video
பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்கும் திரைப்படம் 'லைகர்'. இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டா குத்துச்சண்டை வீரராக நடித்துள்ளார். அவருடன் பிரபல குத்துச் சண்டை வீரர் மைக் டைசனும் நடித்துள்ளார்.
இந்த படத்தில் அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

லைகர்
மும்பையில் குடிசை பகுதியில் வாழும் விஜய் தேவரகொண்டா சர்வதேச அளவில் நடக்கும் குத்துச்சண்டை போட்டியில் இந்தியா சார்பாக கலந்து கொள்கிறார். ஒரு சாதாரண இடத்தில் இருந்து இந்திய அளவில் எவ்வாறு உயர்ந்தார் என்பதை மாஸ், ஆக்ஷன் கலந்த மிரட்டலாக சொல்லியிருக்கும் கதை தான் லைகர். இந்த படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு அம்மாவாக ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார்.

மைக் டைசன்
இந்திய சினிமாவில் முதல் முறையாக இப்படத்தில் மைக் டைசன் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் அவருக்கு கவுரவ வேடம் என்றும், படத்தின் இறுதிக் கட்டத்தில் அவரது கதாபாத்திரத்தை வைத்தே முக்கியமான திருப்பம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் வருகிற ஆகஸ்ட் மாதம் 25-ந்தேதி வெளியாகவுள்ளது.

அமீர்கானுக்கு ஆதரவு
சமீபத்தில் இந்தி நடிகர் அமீர்கான் நடித்து திரைக்கு வந்த லால் சிங் சத்தா படத்தை புறக்கணிக்கும்படி வலைத்தளத்தில் பலர் வற்புறுத்தியதை விஜய்தேவரகொண்டா கண்டித்து இருந்தார். லால் சிங் சத்தா படத்தை நீங்கள் புறக்கணிப்பதால், அமீர்கான் மட்டும் பாதிக்கப்படவில்லை, அந்த படத்திற்காக வேலை பார்த்த பலர் வாழ்வாதாரத்தை இழக்கிறாரர்கள். இந்த புறக்கணிப்பு ஏன் நடக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால், இது தவறான புரிதல் என்று கூறியிருந்தார்.

வெளியிடுவதில் சிக்கல்
அதுமட்டுமில்லாமல், ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய் தேவரகொண்டா ஷூ அணிந்து காலை மேசையில் வைத்தபடி நாற்காலியில் அமர்ந்து பேட்டி கொடுத்திருந்தார். இதனால் கடுப்பான ரசிகர்கள் லைகர் படத்தை புறக்கணிக்கும்படி ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகின்றனர். வட மாநிலங்களில் லைகர் திரைப்படத்திற்கு எதிர்பார்த்த புக்கிங் இல்லாமல் திரையரங்குகள் காலியாக உள்ளதால், லைகர் படத்தை இந்தியில் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நான் பயப்பட மாட்டேன்
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள விஜய்தேவரகொண்டா, வளருகிறவர்கள் குறி வைக்கப்படுவது சகஜம்தான். நேர்மையானவர்கள் பக்கம் கடவுள் இருப்பார். 3 ஆண்டுகளாக உயிரை கொடுத்து லைகர் படத்தை எடுத்து இருக்கிறோம். அந்த படத்தை புறக்கணிக்கும்படி அழைப்பு விடுத்து இருப்பது வேதனையாக உள்ளது. இதற்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன், படத்தை யார் தடுப்பார்கள் என்று பார்க்கிறேன் என கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











