Don't Miss!
- News அமவுண்டை பாதியாக குறைத்த மா.செ.க்கள்..பாதியில் பறந்த ஏஜெண்ட்கள்! என்ன இது இரட்டை இலைக்கு வந்த சோதனை?
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Finance ப்ளே ஸ்கூல் பையனுக்கு ரூ. 4,30,000 கட்டணமா.. ட்ரெண்ட் ஆகும் தந்தையின் கதறல் போஸ்ட்!
- Lifestyle தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது தெரியுமா? இத்தனை ஸ்பூனுக்கு மேல தெரியாம கூட சாப்பிடாதீங்க...
- Technology யாருமே எதிர்பார்க்கல.. 8ஜிபி ரேம்.. 50எம்பி கேமரா.. புதிய Samsung 5ஜி மாடல் அறிமுகம்.. என்ன விலை?
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
2 வருஷத்திற்கு விஜய் என்னுடன் நடிக்க மாட்டார், நான் செய்த காரியம் அப்படி: ரஷ்மிகா
ஹைதராபாத்: குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்கு விஜய் தேவரகொண்டா என்னுடன் சேர்ந்து நடிக்க மாட்டார் என நடிகை ரஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார்.
தெலுங்கு ரசிகர்கள் கொண்டாடும் ரீல் ஜோடி விஜய் தேவரகொண்டா, ரஷ்மிகா மந்தனா. அவர்கள் கீத கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய இரண்டு படங்களில் சேர்ந்து நடித்துள்ளனர்.
கீத கோவிந்தம் படத்தில் நடித்த போது விஜய்யுடன் ஏற்பட்ட நெருக்கத்தால் தான் ரஷ்மிகா தனது திருமணத்தை நிறுத்தினார் என்று கூட கூறப்பட்டது. விஜய்யும், ரஷ்மிகாவும் காதலிப்பதாக பல காலமாக பேசப்படுகிறது.
இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார் ரஷ்மிகா. பார்க்க நல்ல ஜோடியாக இருக்கிறீர்களே, நீங்கள் ஏன் நிஜ வாழ்க்கையிலும் காதலிக்கக் கூடாது என்று ரசிகர்கள் கேட்டனர். அதற்கு ரஷ்மிகா கூறியதாவது,
சும்மா உட்கார்ந்து பேசி, காதலிப்பதை விட எங்களுக்கு பல வேலை உள்ளது. வேலை மூலம் நாங்கள் அன்பையும், மரியாதையையும் வெளிப்படுத்துகிறோம். நான் அவரை செமயாக எரிச்சலூட்டியுள்ளேன். அதனால் குறைந்தது 2 ஆண்டுகளுக்காவது என்னுடன் சேர்ந்து எந்த படத்திலும் நடிக்க மாட்டார் என்று தெரிவித்துள்ளார்.
கமலையே ஏமாற்றி அழகாக பொய் சொன்ன சாண்டி, லாஸ்லியா.. நீலசாயம் வெளுத்து போச்சு டும் டும் டும்!
ரஷ்மிகா கார்த்தியின் சுல்தான் படம் மூலம் கோலிவுட் வந்துள்ளார். பாக்யராஜ் கண்ணன் இயக்கி வரும் சுல்தான் படத்தின் தலைப்பை படக்குழு வெளியிடும் முன்பு ரஷ்மிகா சமூக வலைதளத்தில் உளறிவிட்டார். இதனால் படக்குழு அவர் மீது கடுப்பில் உள்ளது.
இதற்கிடையே விஜய் தேவரகொண்டாவை டியர் காம்ரேட் படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்க பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹார் அழைத்தார். ரூ. 40 கோடி சம்பளம் தருகிறேன் என்று அவர் தெரிவித்தும் விஜய் நடிக்க மறுத்துவிட்டார். விஜய் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் ஃபைட்டர் படத்தில் நடிக்க உள்ளார். அந்த படத்தை நடிகை சார்மி, பூரி ஜெகன்நாத்துடன் சேர்ந்து தயாரிக்கிறார்.