சூர்யாவின் அடுத்த கால்ஷீட் இயக்குநர் விஜய்க்கு... அப்போ கவுதம் மேனன்?

'சிங்கம்-2' படத்திற்கு பிறகு லிங்குசாமி மற்றும் கவுதம் மேனன் படங்களில் நடிக்க சம்மதித்திருந்தார் சூர்யா. ஆனால் கவுதம் மேனன் படத்தில் நடிப்பாரா இல்லையா என்று தெரியாத நிலை.
அதேநேரம், இயக்குநர் சீமானின் பகலவன் கதையை காப்பியடித்துதான் சூர்யாவுக்கு கதை பண்ணியிருக்கிறார் லிங்குசாமி என புகார் கிளம்பியது. உடனே கதையை மார்றினார் லிங்கு. சூர்யாவும் அதில் நடிப்பதை உறுதிப்படுத்திவிட்டார். இப்படத்தின் படப்பிடிப்பை ஆகஸ்ட் 27-ந் தேதி சென்னை அல்லது மதுரையில் தொடங்க திட்டமிட்டுள்ளனர்.
லிங்குசாமி படம் முடிந்ததும் அடுத்து இயக்குநர் விஜய் படத்துக்கு கால்ஷீட் கொடுத்துள்ளார் சூர்யா.
'தலைவா' படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் இருக்கும் இயக்குனர் விஜய்-சூர்யா இருவரும் சந்தித்து பேசி இருக்கிறார்கள். இந்த சந்திப்பில் இருவரும் அடுத்த படத்தில் இணைவதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
'தலைவா' படம் வெளியானவுடன் இயக்குனர் விஜய் மிக குறுகிய பட்ஜெட்டில் 'தெய்வத்திருமகள்' சாராவை வைத்து படம் ஒன்றை இயக்குகிறார். அதற்குள் சூர்யாவும் லிங்குசாமி படத்தை முடித்துவிடுவார். அதன் பிறகு சூர்யா - விஜய் படம் தொடங்கும்.
ஆக, கவுதம் மேனன் காத்திருக்க வேண்டிய நிலை.


Click it and Unblock the Notifications











