Vijay: மனைவி சங்கிதாவை எதிர்கொள்ளும் விஜய்.. பிரசாரத்திற்கு மத்தியில்.. அடுத்த கட்டத்தில் விவாகரத்து விவகாரம்
சென்னை: தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய், திருமணத்தை மீறிய உறவில் நடிகை ஒருவருடன் பழகிக் கொண்டிருக்கிறார், என்று அவரது மனைவி சங்கீதா குற்றம் சாட்டி விவாகரத்து கேட்டிருந்தார். இது தொடர்பாக செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் முறையிட்டிருந்தார். அவரது விவாகரத்து மனு தொடர்பான தகவல்களும் ஆவணங்களும் வெளியாகி தமிழக வெற்றிக் கழகத்தினர், விஜய் ரசிகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இந்த விவகாரம் பொதுவெளியில் தெரிய வந்த பின்னர் நடிகர் விஜய், அவரது தோழியான நடிகை திரிஷாவுடன் திருமண நிகழ்ச்சிக்கு மேட்சிங் ஆன ஆடைகள் அணிந்து ஜோடியாக சென்றது பெரும் பேசு பொருளாக மாறியது. இதைனை பலரும் காட்டமாக விமர்சித்தனர். அதன் பின்னர், அவரது கட்சி சார்பில் நடத்தப்பட்ட மகளிர் தின கொண்டாட்டத்தில், தனது விவாகரத்து விவகாரத்தை மறைமுகமாக பேசுகையில், அதெல்லாம் அவ்வளவு ஒர்த் இல்லை என்று கூறினார்.

விஜய் இவ்வாறு தெரிவித்தது, அவரது மனைவி சங்கீதாவைத்தான் கூறினார் இன்று பலரும், விவாகரத்து விவகாரத்தை எண்ணி ரசிகர்கள் மற்றும் தொண்டர்களாகிய நீங்கள் கவலைப்பட வேண்டாம், அது அந்த அளவுக்கு தகுதியான விஷயமாக இல்லை, நீங்கள் வருத்தப்படும் அளவுக்கு தகுதியான விஷயமாக இல்லை என்று தான் விஜய் குறிப்பிட்டார், என்று விஜய் ரசிகர்களும் மாறி மாறி பதிவிட்டனர்.
இந்நிலையில் இந்த விவாகரத்து மனு ஏற்கனவே குடும்ப நல நீதிமன்றத்தின், மூலம் அட்டவணை படுத்தப்பட்ட தேதியின்படி, ஏப்ரல் 20 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. இதனால் விஜய்யின் மனைவி சங்கீதா, நடிகர் விஜய் என இருவரும் நீதிமன்றத்திற்கு நேரடியாக வருகை தந்தாக வேண்டும்.
ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக விஜய்யின் மனைவி சங்கீதா செய்தியாளர்களை சந்தித்து விஜய்க்கு எதிராக கருத்துக்களை தெரிவிக்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் விஜய் தரப்பில் இருந்தும் சங்கீதாவை சமாதானப்படுத்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது என்றும் பேச்சுக்கள் அடிபட்டது. ஆனாலும் நாளை விவாகரத்து மனு தொடர்பான, வழக்கில் சங்கீதாவை விஜய் நீதிமன்ற வளாகத்தில் எதிர்கொள்ள உள்ளார் என்பதால், பலரும் இது தொடர்பாக பரபரப்பாக பேசி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications