Don't Miss!
- News ஒரு ஓட்டுக்காக போராடிய "சர்க்கார்" விஜய் நிலையா இது.. கட்சி தலைவரான முதல் தேர்தலிலேயே ஏமாற்றம்
- Lifestyle எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கோவை விஜய் ரசிகர் மன்றங்கள் கலைப்பு.. திமுகவில் சேர்ந்த ரசிகர்கள்!
நடிகர் விஜய்யின் தந்தையும் விஜய் மக்கள் இயக்க நிறுவனத் தலைவருமான இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகரன் கடந்த சில தினங்களுக்கு முன் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்து, அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்திருந்தார். இதனை எதிர்த்து ஏற்கெனவே சேலத்தில் சில ரசிகர்கள் திமுகவை ஆதரிப்பதாகக் கூறி மன்றத்தைக் கலைத்தனர்.
ஆனால் இதனை எஸ் ஏ சந்திரசேகரன் மறுத்திருந்தார்.
இந்நிலையில் கோவையில் விஜய் ரசிகர் மன்றங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் சுமார் 300 பேர், தங்கள் மன்றங்களைக் கலைத்து விட்டு, திமுகவில் இணைந்தனர். மேலும் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்ததற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் விஜய் உருவம் பதித்த பேனர்களை தீ வைத்து எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கடந்த சில தினங்களுக்கு முன் விஜய் மக்கள் இயக்கத்தில் மாநில பதவி வகித்த ஜெயசீலன், திருவள்ளூர் மாவட்ட நிர்வாகி ஸ்டாலின் பிரபு ஆகியோர் அந்த இயக்கத்திலிருந்து நீக்கப்பட்டதாக எஸ் ஏ சந்திரசேகர் அறிவித்தார். அவர்கள் உடனடியாக திமுகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
இப்போது கோவையில் ஏற்பட்டு நிலைமை குறித்து விஜய் தரப்பில் விசாரித்த போது, ஆளும் கட்சி கடைசி நேரத்தில் செய்யும் பரபரப்பு இது. கோவை ரசிகர் மன்றங்கள் கட்டுப்பாட்டில் உள்ளதாக தெரிவித்தனர்.