twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கோவை விஜய் ரசிகர் மன்றங்கள் கலைப்பு.. திமுகவில் சேர்ந்த ரசிகர்கள்!

    By Shankar
    |

    Vijay
    கோவை: கோவையில் விஜய்யின் ரசிகர் மன்றங்கள் கலைக்கப்பட்டதாகவும், இவர்களில் ஒரு பகுதியினர் திமுகவில் சேர்ந்ததாகவும் அறிவித்துள்ளனர்.

    நடிகர் விஜய்யின் தந்தையும் விஜய் மக்கள் இயக்க நிறுவனத் தலைவருமான இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகரன் கடந்த சில தினங்களுக்கு முன் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்து, அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்திருந்தார். இதனை எதிர்த்து ஏற்கெனவே சேலத்தில் சில ரசிகர்கள் திமுகவை ஆதரிப்பதாகக் கூறி மன்றத்தைக் கலைத்தனர்.

    ஆனால் இதனை எஸ் ஏ சந்திரசேகரன் மறுத்திருந்தார்.

    இந்நிலையில் கோவையில் விஜய் ரசிகர் மன்றங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் சுமார் 300 பேர், தங்கள் மன்றங்களைக் கலைத்து விட்டு, திமுகவில் இணைந்தனர். மேலும் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்ததற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் விஜய் உருவம் பதித்த பேனர்களை தீ வைத்து எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    கடந்த சில தினங்களுக்கு முன் விஜய் மக்கள் இயக்கத்தில் மாநில பதவி வகித்த ஜெயசீலன், திருவள்ளூர் மாவட்ட நிர்வாகி ஸ்டாலின் பிரபு ஆகியோர் அந்த இயக்கத்திலிருந்து நீக்கப்பட்டதாக எஸ் ஏ சந்திரசேகர் அறிவித்தார். அவர்கள் உடனடியாக திமுகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

    இப்போது கோவையில் ஏற்பட்டு நிலைமை குறித்து விஜய் தரப்பில் விசாரித்த போது, ஆளும் கட்சி கடைசி நேரத்தில் செய்யும் பரபரப்பு இது. கோவை ரசிகர் மன்றங்கள் கட்டுப்பாட்டில் உள்ளதாக தெரிவித்தனர்.

    English summary
    More than 300 plus hardcore fans of actor Vijay have announced their disassociation with the actor and extended their support to DMK. They have also dissolved their clubs in various areas of Coimbatore district.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X