லாக்டவுன் முடியும் வரை கர்ப்பிணிகளுக்கு இலவச ஆம்புலன்ஸ்.. விஜய் மக்கள் மன்றத்தினர் அசத்தல்!
சென்னை: லாக்டவுன் முடியும் வரை கர்ப்பிணிகளுக்கு இலவச ஆம்புலன்ஸ் சேவையை மயிலாடுதுறை விஜய் மக்கள் மன்றத்தினர் அறிவித்துள்ளனர்.
Recommended Video
தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமாக உள்ளது. பல மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.
இதனால் நோயாளிகள் படுக்கைகள் இன்றி தவித்து வருகின்றனர்.

கர்ப்பிணி பெண்களுக்கு சிக்கல்
அரசு மற்றும் தனியார் என பெரும்பாலான ஆம்புலன்ஸ்கள் கொரோன நோயாளிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் கர்ப்பிணி பெண்களுக்கு அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இரண்டு கார்கள்
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த விஜய் மக்கள் மன்றத்தினர் பாராட்டுக்குரிய ஏற்பாட்டை செய்துள்ளனர். அதாவது, மயிலாடுதுறை சுற்றுவட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிகள் பயன்பெறும் வகையில் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு 2 கார்களை இலவசமாக வழங்கியுள்ளனர்.

விஜய் ரசிகர்கள் ஏற்பாடு
கொரோனா லாக்டவுன் முடியம் வரை மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனைக்கு பிரசவத்திற்காகவும், மகப்பேறு முடிந்து தாய், சேயை வீட்டிற்கு இலவசமாக அழைத்துச் செல்லவும் விஜய் ரசிகர்கள் இந்த ஏற்பாட்டை செய்துள்ளனர்.

விருத்தாசலம் மருத்துவமனை
ஏற்கனவே விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு இலவச ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், மாஸ்க்குகள் க்ளவுஸ்கள் என மருத்துவர்களுக்கும் நோயாளிகளுக்கும் வழங்கி உதவி செய்த விஜய் ரசிகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











