Don't Miss!
- Sports PBKS vs MI : என்னா அடி.. பீதியை கொடுத்திட்ட தம்பி.. அஷுதோஷ் சர்மாவை நேரடியாக பாராட்டிய அம்பானி மகன்!
- News ஜனநாயக கடமை ஆற்ற முதல் ஆளாக வந்த நடிகர் அஜித்.. 30 நிமிடம் முன்பே வந்து காத்திருந்து ஓட்டு போட்டார்!
- Technology யாரு சாமி நீ.. UPI.. யூடியூப்.. சிங்கிள் சார்ஜில் 6 நாட்கள் பேட்டரி.. புதிய 4ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
வீடு மீது கல்வீச்சு: விஜய் ரசிகர்கள் ஆர்ப்பாட்டம்!!
இப்போது இசையமைப்பாளர் விஜய் ஆன்டனி குடியிருந்து வரும், நடிகர் விஜய்க்கு சொந்தமான வீட்டின் மீது சில தினங்களுக்கு முன் மர்ம நபர்கள் சிலர் கல்வீசினர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்தார். யாரோ சிலர் குடிபோதையில் செய்த செயல் இது என போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து விஜய் ரசிகர்கள் மாவட்டம் தோறும் ஆர்ப்பாட்டங்கள் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
முதல் கட்டமாக, இந்தத் தாக்குதல் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தும், தாக்குதல் நடத்தியவர்களைக் கண்டிக்கக் கோரியும், கோவை மாவட்ட விஜய் இளைஞர் நற்பணி இயக்கம் மற்றும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கோவையில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
செஞ்சிலுவை சங்கம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு இளைஞர் அணி தலைவர் யுவராஜ் தலைமை தாங்கினார். ரசிகர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
விஜய் வீடு மீது கல்வீசி தாக்கியவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என்று கோஷமிட்டனர்.