Don't Miss!
- News கட்டுக்கதை அவிழ்த்து விடுறாங்க.. குடும்பத்தினரை பற்றி அவதூறு பரப்புறாங்க.. சசிகாந்த் செந்தில் பளீர்
- Education தமிழக கல்லூரி மாணவர் பதிவு விண்ணப்ப சாளரத்தில் மாற்றம்...!
- Lifestyle இந்த 5 ராசிகளில் பிறந்த பெண்கள் வீட்டையும், நாட்டையும் ஆள்வதற்கு பிறந்தவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Technology பொளக்குது ஆர்டர்.. ரூ.7,599 பட்ஜெட்ல 12GB ரேம்.. அல்ட்ரா பிரீமியம் கேமரா லுக்.. 1டிபி மெமரி.. எந்த மாடல்?
- Automobiles ரூ2.11 லட்சம் செலவு செய்தது கணவன் முகத்துல இதை பார்க்க தான்! கல்யாணத்தன்று மணப்பெண் செய்த சம்பவம்!
- Finance தங்கம் விலை இமாலய உச்சத்தை தொட்டது.. சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை..!!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
புதுவையைக் கலக்கும் "இளைய தளபதி" பஸ்.. அடேங்கப்பா விஜய் ரசிகர்கள்
Recommended Video
புதுச்சேரி: நடிகர் விஜய் பிறந்தநாளையொட்டி புதுச்சேரியில் விஜய் படங்கள் ஒட்டப்பட்ட பேருந்தில் இன்று ஒருநாள் முழுவதும் பொதுமக்கள் இலவசமாக பயணம் செய்து வருகின்றனர்.
நடிகர் விஜய்யின் பிறந்த நாளை அவரது ரசிகர்கள் கோலாகலாக கொண்டாடி வருகின்றனர். விஜய் நடித்து வரும் புதிய படத்தின் முதல் லுக், 2வது லுக் மற்றும் படத்தின் பெயர் ஆகியவை நேற்று அடுத்தடுத்து அறிவிக்கப்பட்டன.
இதன் மூலம் விஜய் ரசிகர்களின் கொண்டாட்டம் தொடங்கியது. நேற்று தொடங்கிய இந்த கொண்டாட்டம் இன்று உச்சத்தை எட்டியது.
நடிகர் விஜய்யின் பிறந்தநாளையொட்டி புதுச்சேரியில் உள்ள அவரது ரசிகர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கியும், கேக் வெட்டியும் அவரது பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் புதுச்சேரியில் உள்ள விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் விஜய் பிறந்தநாளையொட்டி தனியார் பேருந்து ஒன்றில் வித்தியாசமான முறையில் பேருந்து முழுவதும் விஜய் படங்களின் ஸ்டிக்கர்களை ஒட்டி பிறந்தநாளை கொண்டாடினர்.
மேலும் விஜய் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ள பேருந்தில் புதுச்சேரி - பாகூர் வழித்தடத்தில் இன்று ஒருநாள் முழுவதுமாக பொதுமக்கள் இலவசமாக பயணம் செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் வில்லியனூர் பகுதியில் உள்ள ஒரு திரையரங்கில் போக்கிரி திரைப்படத்தை இலவசமாக காண்பதற்கு விஜய் ரசிகர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.