நியூசிலாந்தில் எதிரொலித்த விஜய்யின் வாரிசு.. இந்தியா - நியூசிலாந்து கிரிக்கெட் போட்டியில் சம்பவம்!
சென்னை: இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் போது வாரிசு பதாகையை ரசிகர் ஒருவர் கேமராவுக்கு முன்பாக காட்டிய போட்டோக்கள் இணையத்தில் டிரெண்டாகி உள்ளன.
சத்யம் தியேட்டரில் படு மாஸாக விஜய்யின் பிரம்மாண்ட கட் அவுட் நிறுவப்பட்டுள்ள நிலையில், சென்னையின் பல முன்னணி தியேட்டர்களை வாரிசு டீம் தட்டித் தூக்கி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அஜித்தின் துணிவு படத்துடன் மோத முழு வீச்சில் ரெடியாகி வருகிறது விஜய்யின் வாரிசு பட டீம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆடியோ லாஞ்ச்
இந்த டிசம்பர் மாதம் விஜய்யின் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் வரும் 24ம் தேதி பிரம்மாண்டமாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாரிசு படம் கடைசி நேரத்தில் சந்தித்த ஏகப்பட்ட சிக்கல்கள் குறித்தும் படம் எப்படி வந்திருக்கு என்பது குறித்தும் விஜய் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரம்மாண்ட கட் அவுட்
தெறி ஸ்டைலில் ஜீப்பில் விஜய் சாய்ந்து அமர்ந்து கொண்டு கொடுத்துள்ள போஸை பார்த்ததுமே விஜய் ரசிகர்கள் உற்சாகத்தின் உச்சிக்கே சென்று விட்டனர். சென்னையின் முன்னணி தியேட்டரான சத்யம் திரையரங்கில் பிரம்மாண்ட வாரிசு கட் அவுட் நிறுவப்பட்டுள்ளது. கேரளாவிலும் வழக்கம் போல தியேட்டர்களுக்கு முன்னால் விஜய் ரசிகர்கள் கட் அவுட்களை வைக்க ஆரம்பித்துள்ளனர்.

நியூசிலாந்தில் வாரிசு
தமிழ்நாடு, கேரளா மட்டுமின்றி ஓவர்சீஸ் ரைட்ஸை போல ஆல் ஏரியாவிலும் வாரிசு படம் டிரெண்டாகி வருகிறது. இந்நிலையில், நியூசிலாந்தில் வாரிசு படத்தின் பதாகையை தமிழ் ரசிகர் ஒருவர் ஏந்தி நிற்கும் போட்டோக்கள் இணையத்தில் தீயாக பரவி விஜய் ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தி உள்ளன.

இந்தியா - இங்கிலாந்து போட்டி
நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் பகுதியில் இன்று நடைபெற்ற இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி ஒரு நாள் போட்டியின் போது தான் இந்த சம்பவத்தை அந்த ரசிகர் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக வலிமை பட வெளியீட்டுக்கு முன்பாக அஜித் ரசிகர்கள் கிரிக்கெட் வீரர்களிடம் வலிமை அப்டேட்டை கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











