Don't Miss!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Lifestyle April Horoscope 2024: ஏப்ரல் மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு பண மழை பொழியப் போகுது...
- Technology ரூ.17,000 பட்ஜெட்ல பரபரப்பு! 70W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 24GB ரேம், 1TB மெமரி, 5G ஆதரவு.. ஏப்.4 முதல் SALE!
- News தேனி அருகே ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் அடுத்தடுத்து உயிரிழப்பு.. போலீசார் தீவிர விசாரணை
- Sports ரூ.8.4 கோடியை மறந்துவிடு.. உன்னோட வேலை அதுமட்டும் தான்.. தோனியின் வார்த்தை குறித்து சிஎஸ்கே சிங்கம்!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
பிகிலுக்கு சிக்கல் வராமல் இருக்க மண் சோறு சாப்பிடும் விஜய் ரசிகர்கள் - மாரியம்மனுக்கு வேண்டுதல்
சென்னை: விஜய் நடித்த பிகில் திரைப்படத்தின் காப்புரிமை கேட்டு உதவி இயக்குநர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதனால் இப்படம் வரும் 25ஆம் தேதி வெளியாவதில் சிக்கல் எற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த நாகை மாவட்ட விஜய் ரசிகர்கள் பிகில் திரைப்படம் எந்தவித சிக்கலும் இல்லாமல் வெளியாகி வெற்றியடைய வேண்டும் என்று கோவிலில் மண்சோறு சாப்பிட்டு பிரார்த்தனை செய்தனர்.
இந்த நிகழ்வு தமிழகம் எங்கும் உள்ள ரசிகர்களை உணர்ச்சி வசப்படுத்தியுள்ளது. மேலும் இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் பரபரப்பாக வைரலாகி வருகிறது.
இளைய தளபதி விஜய்யின் பிகில் திரைப்படத்தை வெறித்தனமாக எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக பல நிகழ்வுகள் தமிழகம் எங்கும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில், நாகை மாவட்ட ரசிகர்கள் ஒரு நெகிழவைக்கக் கூடிய ஒரு செயலை தங்களது தளபதிக்காக செய்துள்ளனர். அது சார்ந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அட்லீ-விஜய் காம்போவில் உருவாகி தீபாவளிக்கு வெளியாக தயாராக இருக்கும் பிகில் படத்திற்கு பலத்த எதிர்பார்ப்பு இருப்பது அனைவரும் அறிந்த ஒரு செய்தி. ஆனால் படத்தின் காப்புரிமை கேட்டு துணை இயக்குனர் செல்வா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடந்துள்ளதால் பிகில் திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
வரும் அக்டோபர் 25ஆம் தேதி பிகில் வெளியாகும் என்று ஆவலுடன் காத்திருக்கும் விஜய் ரசிகர்களுக்கு இந்த செய்தியானது அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இதனையடுத்து, விஜய் ரசிகர்கள் அவரின் பிகில் திரைப்படம் எந்த ஒரு சிக்கலும் இல்லாமல் நல்லபடியாக வெளியாகி வெற்றி பெற வேண்டும் என்று கடவுளிடம் மன்றாடி பிராத்தனை செய்து வருகிறார்கள்.
ஹைகோர்ட் அதிரடி.. பிகில் படம் ரிலீஸ் ஆகுமா ஆகாதா.. அதிர்ச்சியில் ரசிகர்கள்! #Bigil
நாகை மாவட்டத்தில் உள்ள விஜய் ரசிகர் மன்றத்தின் சார்பில் சிறப்பு வழிபாட்டுடன் பூஜை ஒன்று மயிலாடுதுறையில் உள்ள மாரியம்மன் கோயிலில் நடைபெற்றது. இந்த பூஜையின் போது விஜய் ரசிகர்கள் அவரின் பிகில் திரைப்படம் எந்த ஒரு சிக்கலும் இல்லாமல் தீபாவளிக்கு வெளியாகவேண்டும்.
அது ஒரு வெற்றிப்படமாக அமைய வேண்டும். மேலும், அவரும் அவரது குடும்பமும் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்று மண் சோறு சாப்பிட்டனர், விஜய்யின் ரசிகர்கள். பொதுவாக விஜய் படம் வெளியாவதற்கு தான் கொண்டாட்டங்கள் அதிகமாக இருக்கும்.
ஆனால் இந்த முறை படம் வெற்றியடைய பூஜைகள் நடத்தப்பட்டது இதுவே முதல் முறை. இந்த நிகழ்வு தமிழகம் எங்கும் உள்ள ரசிகர்களை உணர்ச்சி வசப்படுத்தியுள்ளது. மேலும் இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் பரபரப்பாக வைரலாகி வருகிறது.