Don't Miss!
- Automobiles என்னதான் பைக் காதலரா இருந்தாலும் இதெல்லாம் ஓவருங்க.. நடிகர் ஜான் ஆபிரகாம் வாங்கிய இந்த பைக்கின் விலை இவ்வளவா!!
- Lifestyle Today Rasi Palan 18 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது...
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
பார்த்திபன் குடும்பத்தாருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்: வைரல் புகைப்படங்கள்
Recommended Video
சென்னை: பார்த்திபன் குடும்பத்தாருக்கு விஜய் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
நடிகரும், இயக்குனருமான பார்த்திபனின் இளைய மகள் கீர்த்தனா தனது காதலரான அக்ஷய் அக்கினேனியை கடந்த 8ம் தேதி சென்னையில் திருமணம் செய்து கொண்டார்.
அக்ஷய் பிரபல எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்தின் மகன் ஆவார்.
திருமணம்
மகளின் திருமணத்திற்கு வருமாறு பார்த்திபன் விஜய் வீட்டிற்கு சென்று பத்திரிகை வைத்து அழைத்தார். பத்திரிகை கொடுக்கச் சென்றபோது எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டார் பார்த்திபன்.
பெற்றோர்
கீர்த்தனா திருமணத்திற்கு விஜய் வரவில்லை. அவர் சார்பில் அவரின் அப்பா, அம்மா வந்து மணமக்களை ஆசிர்வாதம் செய்தனர். இந்நிலையில் விஜய் பார்த்திபன் குடும்பத்தாருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
கீர்த்தனா
விஜய் 62 படப்பிடிப்பில் பிசியாக இருந்ததால் திருமணத்திற்கு செல்லாத விஜய் அவர்களின் வீட்டிற்கு சென்று கீர்த்தனா, அக்ஷயை வாழ்த்தியுள்ளார். இதை பார்த்து பார்த்திபன் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
புகைப்படம்
பார்த்திபன் மகளை விஜய் வாழ்த்தியபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகிறார்கள்.
கமல்
கீர்த்தனாவின் திருமணத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், ரஜினிகாந்த், கமல் ஹாஸன் என ஏராளமானோர் வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.