ஜில்லாவில் டாப் மோகன் லால்தான்... மகிழ்ச்சியுடன் விட்டுக் கொடுத்த விஜய்!
ஜில்லா படத்தின் டைட்டில் மற்றும் சம்பளம் போன்றவற்றில் முதலிடம் மோகன் லாலுக்கு தருமாறு கேட்டுக்கொண்டாராம் நடிகர் விஜய்.
ஜில்லாவில் முதல் முறையாக மோகன் லாலும் விஜய்யும் நடித்துள்ளனர்.
மோகன்லால் சீனியர். மலையாளத்தில் அவர் முதல் நிலை நடிகர். ஆனால் தமிழில் அவரை விட விஜய்க்குதான் முக்கியத்துவம்.
ஆனாலும் மோகன்லாலின் சீனியாரிட்டி மற்றும் அவர் மீது தான் வைத்துள்ள மரியாதையைக் காட்டும் வகையில், படத்தில் அவருக்கே முதலிடம் தருமாறு விஜய்யே இயக்குநர் நேசன் மற்றும் தயாரிப்பாளரைக் கேட்டுக் கொண்டாராம்.

டைட்டிலில் யார் படத்தை முதலில் போடுவது என்ற குழப்பத்தில் இயக்குநர் தவித்தபோது, 'அது ஒரு மேட்டரே இல்ல. அவர் அனுபவம்தான் என் வயசு. எனவே மோகன் லால் பெயரை முதலிலும் என் பெயரை அடுத்ததாகவும் போடுங்க,' என்று கேட்டுக்கொண்டாராம்.
அதேபோல சம்பளம் தரும் விஷயத்தில் விஜய்க்கு அதிகமாகத் தந்து, மோகன் லாலுக்கு குறைவாகத் தருவதா என்று யோசித்திருக்கிறார் தயாரிப்பாளர் ஆர்பி சவுத்ரி.
இதுகுறித்து அவர் விஜய்யிடம் வெளிப்படையாகப் பேசியபோது, ஒன்றும் பிரச்சினையில்லை... அவருக்கே என்னைவிட அதிக சம்பளம் கொடுங்க. அதுதான் அவரைப் போன்ற கலைஞர்களுக்கு நாம் செய்யும் மரியாதை," என்றாராம்.
இந்த இரண்டு விஷயங்களையும் கேள்விப்பட்டு இனிய அதிர்ச்சியில் மூழ்கியுள்ளார் மோகன்லால். காரணம் அவரது இத்தனை ஆண்டு சினிமா வாழ்க்கையில் அவர் பெறும் முதல் அதிக சம்பளம் இதுவே. மலையாளத்தில் என்னதான் பெரிய படம் என்று சொன்னாலும், அதன் பட்ஜெட் மிஞ்சிப் போனால் ரூ 15 கோடிதான் (எகா - பழஸிராஜா). லட்சங்களில் சம்பளம் பெற்று வந்த மம்முட்டி - மோகன் லால் இப்போதுதான் கோடிகளில் வாங்க ஆரம்பித்துள்ளனர்.
இதில் ரஜினி, கமலுக்குப் பின் அதிக சம்பளம் வாங்கும் ஹீரோவான விஜய்யை விட அதிக சம்பளம் என்றால் யோசித்துப் பாருங்கள்..!


Click it and Unblock the Notifications











