Jana Nayagan: ஜன நாயகன் லீக் ஆனது இப்படியா? நடந்ததை உடைத்த எடிட்டர் பிரதீப் ராகவ்.. மொத்த திரையுலகமும் ஷாக்!
சென்னை: கடந்த சில தினங்களாகவே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்திய விஷயம் என்றால் அது ஜன நாயகன் லீக் ஆனது தான். விஜய் போன்ற உச்ச நட்சத்திரம் நடித்த படம் ஹெச்.டி தரத்தில் வெளியானது மொத்த திரை உலத்தினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. லீக் ஆன படத்தில் எடிட் என்று வாட்டர் மார்க் இருப்பதால் இந்த லீக்கிற்கு காரணம் எடிட்டர் அல்லது அவரைச் சுற்றி உள்ளவர்கள், அவரது அணியில் இருப்பவர்களாகத்தான் இருப்பார்கள் என்று பலரும் சந்தேகம் கிளப்பினர்.
இப்படி இருக்கையில் இந்த விவகாரம் தொடர்பாக படத்தின் எடிட்டர் விஜய் ராகவ் தெரிவித்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது, படம் ஜனவரி 9ஆம் தேதி வெளியாகாததால், படத்தின் சவுண்ட் மிக்ஸிங் மற்றும் சிஜி வேலைகளுக்காக அன்னபூரணி ஸ்டூடியோஸ்க்கு படத்தின் காப்பியை இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ஒப்புதலுடன் ஜனவரி 14ஆம் தேதி அனுப்பி வைத்தேன்" என்று தெரிவித்துள்ளார்.

இவர் இவ்வாறு தெரிவித்துள்ளதால் அன்னபூரணி ஸ்டூடியோவில் இருந்து படம் லீக் ஆகி இருக்க வேண்டும். என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.


Click it and Unblock the Notifications











