Don't Miss!
- Lifestyle வெங்காயம் தக்காளி இல்லாம கார சட்னியை எப்படி செய்யணும்-ன்னு தெரியுமா?
- News சினிமா தியேட்டர் மூடப்படுகிறதா? தமிழகத்தில் திரையரங்க காட்சிகள் ரத்தாகிறதா? சட்டென வெளிவந்த அறிவிப்பு
- Sports KKR vs RR : தோனியை அப்படியே பின்பற்றினேன்.. என் ஆட்டத்திற்கு காரணம் அவர் தான்.. பட்லர் நெகிழ்ச்சி!
- Technology அம்பானி அலப்பறை.. 2025 மார்ச் வரை ரீசார்ஜ் பண்ணவே வேணாம்.. 11 மாசத்துக்கு டெய்லி 1.5GB டேட்டா.. என்ன திட்டம்?
- Automobiles கொடுக்கல், வாங்கலில் பிரச்னை.. காருக்கு தீ வைத்த கோவகார கும்பல்! கோடி ரூபா மதிப்புள்ள கார் பைசாவுக்கு தேரல!
- Finance ஒன்றுக்கும் மேற்பட்ட UAN நம்பர்களை ஆன்லைனில் இணைப்பது எப்படி? ரொம்ப ஈசி இதை பாலோ பண்ணுங்க..!
- Travel தமிழ்நாட்டுக்கு உள்ளேயும், பக்கத்துலயும் இவ்வளோ அழகான பெரிய நீர்வீழ்ச்சிகள் இருக்கு தெரியுமா?
- Education யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் ரிலீஸ்..லக்னோ இளைஞர் ஆதித்யா ஸ்ரீவஸ்தவா முதலிடம்
விஜய்யை வைத்து எங்க வீட்டுப் பிள்ளை ரீமேக்!
அமரர் எம்ஜிஆரின் எங்க வீட்டுப் பிள்ளை படத்தை நடிகர் விஜய்யை வைத்து ரீமேக் செய்ய இயக்குநர் செல்வபாரதி திட்டமிட்டுள்ளாராம்.
விஜய்யை வைத்து ப்ரியமானவளே, நினைத்தேன் வந்தாய், வசீகரா போன்ற படங்களை இயக்கியவர் செல்வபாரதி. சீமான் கட்சியில் பிஸியாக இருந்த அவர், மீண்டும் படங்கள் இயக்கும் முயற்சியில் உள்ளார்.
எங்க வீட்டுப் பிள்ளை
எம்.ஜி.ஆர் நடித்த எங்க வீட்டு பிள்ளை படம் 1965 ம் ஆண்டு வெளிவந்து ப்ளாக் பஸ்டரானது. எம்ஜிஆர் படங்களில் ஆக்ஷன் க்ளாஸிக் என்றால் அது இந்தப் படம்தான்.
எம்ஜிஆர்
இதில் எம்.ஜி.ஆர் ஜோடியாக சரோஜா தேவி நடித்திருந்தார். சாணக்யா இயக்கியிருந்தார். இப்படத்தினை ரீமேக் பல நடிகர்கள் முயன்றும் முடியாமல் போனது.
விஜய்
ஆனால் விஜய்யை வைத்து இந்தப் படத்தை ரீமேக் செய்யும் முயற்சியில் அடுத்த கட்டத்துக்கு வந்திருக்கிறாராம் செல்வபாரதி. இவர் ஏற்கெனவே வசீகராவில் விஜய்யை எம்ஜிஆர் ரசிகராகத்தான் காட்டியிருப்பார். இப்போது எம்ஜிஆர் வேடத்திலேயே விஜய்யை நடிக்க வைக்கப் போகிறார்.
விஜயா புரொடக்ஷன்ஸ்
இந்த விஷயத்தை விஜய்க்கு அவர் சொன்னதும், மிக மகிழ்ந்த விஜய், கொஞ்சம் பொறுத்திருங்க என்று கூறியிருக்கிறாராம். அஜீத்தை வைத்து வீரம் பண்ண விஜயா கம்பைன்ஸ், இந்தப் படத்தை விஜய்யை வைத்துத் தயாரிக்கவும் தயாராக உள்ளதாகக் கூறப்படுகிறது.
எம்ஜிஆர் பக்தர்கள் என்ன சொல்லப் போகிறார்களோ..!