Don't Miss!
- News ஸ்மோக் பிஸ்கட் விபரீதம்.. டிரை ஐஸ் பயன்படுத்தினால் 10 ஆண்டு ஜெயில்.. உணவு பாதுகாப்புத்துறை அதிரடி!
- Automobiles சிட்ரோன், ஜீப் காரை வாங்கப்போறீங்களா? இப்ப போன பணத்தை மிச்சம் பண்ணலாம்! ஏப்30க்கு பிறகு காஸ்ட்லியாகிடும்!
- Finance சுட்டெரிக்கும் சூரியன்.. உங்க பர்ஸையும் சுடுகிறது..!! ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய தகவல்..!!
- Technology புதிய கட்டணம்.. அம்பானி போட்ட புது குண்டு.. ஏப்.25 முதல் JioCinema ஆப் முழுசா FREE-ஆ கிடைக்காது!
- Lifestyle Constipation: மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடணுமா? இந்த பானங்களை தினமும் குடிங்க..
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
நடிக்காத நாளுக்கெல்லாம் சம்பளம் கேட்கிறார் பவரு - இயக்குநர் விஜய் மில்டன்
சென்னை: கோலிசோடா படத்தில் நடித்ததற்காக பவர்ஸ்டார் சீனிவாசனுக்கு சம்பள பாக்கி வைக்கவில்லை என்று இயக்குனர் விஜய் மில்டன் தெரிவித்துள்ளார்.
கோலிசோடா படத்தில் நடிக்க 6 நாட்கள் கால்ஷீட் கேட்டனர் என்றும், ஆனால் தான் சம்பந்தப்பட்ட காட்சிகளை 3 நாட்களில் முடித்துவிட்டனர் என்றும் பவர்ஸ்டார் சீனிவாசன் தெரிவித்திருந்தார்.
மேலும் தனக்கு வர வேண்டிய சம்பள பாக்கியை கேட்டால் கேவலமாக பேசுகிறார்கள் என்று அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இது குறித்து கோலிசோடா படத்தின் தயாரிப்பாளரும், இயக்குனருமான விஜய் மில்டன் கூறுகையில்,
பவர்
கோலிசோடா படத்திற்காக பவர்ஸ்டாரை அணுகினோம். அவர் 6 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருந்தார். ஆனால் 3 நாட்கள் தான் படப்பிடிப்புக்கு வந்தார்.
டப்பிங்
பவர்ஸ்டார் தான் நடித்த காட்சிகளுக்கு டப்பிங் பேச வர மறுத்துவிட்டார். இதனால் வேறு ஒருவரை வைத்து நாங்கள் டப்பிங் பேச வைத்தோம்.
சம்பளம்
அவர் நடித்த 3 நாட்களுக்கான சம்பளத்தை அவருக்கு கொடுத்துவிட்டோம். சம்பள பாக்கி எதுவும் இல்லை. அப்படி இருக்கையில் அவர் வராத 3 நாட்களுக்கு சம்பளம் கேட்டால் எப்படி கொடுப்பது.
நடிகர் சங்கம்
பவர்ஸ்டார் எங்கள் மீது கூறும் புகாரை நடிகர் சங்கம் வழியாக தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை. அவர் நடிகர் சங்கம் வழியாக அணுகினாலும் பதில் அளிக்க தயாராக உள்ளோம் என்றார் விஜய் மில்டன்.