Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
அமெரிக்காவுக்கு பறக்கிறது விஜய் - முருகதாஸ் கூட்டணி!
Recommended Video
விஜய், முருகதாஸ் கூட்டணியில் வெளிவந்த 'துப்பாக்கி' அதிரடி த்ரில்லர். கத்தி விவசாயிகளின் பிரச்சினையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம்.
இப்போது இருவரும் மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படத்தின் கதையும் விவசாயம் தொடர்பானதுதானாம்.
கடந்த மாதம் இ ஸி ஆரில் பாடல்காட்சியோடு படப்பிடிப்பு தொடங்கியது. அதன் பிறகு இருபதுநாள் படப்பிடிப்புக்காக மொத்த டீமும் கல்கத்தா போனார்கள். பத்து நாள்களுக்கு மேல் படப்பிடிப்பு நடத்த முடியாத அளவுக்கு சிக்கல் வந்துவிட்டது. அப்படியே சென்னைக்கு யூ டேர்ன்.க ல்கத்தாவில் எடுக்க முடியாத காட்சிகளை, தற்போது காஞ்சிபுரம் போகும் வழியிலுள்ள ஒரு கல்லூரியில் செட் போட்டு படமாக்கிக் கொண்டிருக்கிறார் முருகதாஸ்.
கதையின் முக்கியமான காட்சிகள் அமெரிக்காவில் நடக்கிறதாம். அதனால் மொத்த டீமும் அடுத்த மாதம் அமெரிக்காவுக்கு போகவிருக்கிறார்கள். அங்கே இருபதுநாள் படப்பிடிப்பு நடத்த திட்டம் வைத்திருக்கிறார்கள். பொதுவாக வெளிநாட்டில் படப்பிடிப்பு என்றால் பெரிய அளவில் கூட்டம் சேர்க்க மாட்டார்கள். பெரிய பட்ஜெட் படங்களுக்கு அந்த விதிவிலக்கு கிடையாது. இத்தனைக்கும் இது 'சன் பிக்சர்ஸ்' தயாரிப்பு. சொல்லவா வேண்டும்! ஆனாலும் ஆட்களின் எண்ணிக்கையைக் குறைக்கச் சொல்லிவிட்டாராம். காரணம்? அமெரிக்காவில் நடக்கும் காட்சிகள்தான் இந்தக் கதைக்கு முக்கியமான கரு. படம் திரைக்கு வரும்வரை அது வெளியில் போய்விடக்கூடாது என்பதில் ரொம்பவே கவனமாக இருக்கிறார் இயக்குநர் முருகதாஸ்.