twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கத்தியிலிருந்து லைகாவைக் கழற்றிவிட விஜய், முருகதாஸ் முடிவு!

    By Shankar
    |

    சென்னை: கத்தி படத்துக்கு தமிழுணர்வாளர்கள், ஈழ ஆதரவு கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள பெரும் எதிர்ப்பு காரணமாக, அந்தப் படத்தின் தயாரிப்பாளர் லைகா நிறுவனத்தை கழற்றிவிட இயக்குநர் முருகதாஸும், நடிகர் விஜய்யும் முடிவு செய்துள்ளனர்.

    இந்தப் படத்தின் தயாரிப்புப் பொறுப்பை பாக்ஸ் ஸ்டுடியோ நிறுவனம் ஏற்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

    vijay and murugadoss

    கத்தி படத்தை முதலில் அய்ங்கரன் நிறுவனம்தான் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அய்ங்கரன் வழிகாட்டுதலோடு லைகா நிறுவனம் தயாரிக்கும் என அறிவித்தார்கள். அப்போதிலிருந்து எதிர்ப்பு வலுக்க ஆரம்பித்தது.

    லைகா நிறுவனம், அதன் பின்னணி, இலங்கை அரசில் இந்த நிறுவனத்துக்கு உள்ள செல்வாக்கு, ராஜபக்சே குடும்பத்துடன் லாகாவுக்கு உள்ள தொழில் முறை உறவுகள்.. என அனைத்தையும் ஆதாரங்களோடு முன் வைத்தது மீடியா.

    ஆனால், இதனை பலமாக மறுத்து வந்த ஏ ஆர் முருகதாஸ், லைகா நிறுவனத்துக்கு பெரும் ஆதரவு அளித்து வந்தார். அந்த நிறுவனத்துக்கு படம் இயக்குமாறு வேறு இயக்குநர்களையும் கேட்டுக் கொண்டார்.

    இந்த நிலையில் கத்தி படத்துக்கு எதிராக 65 அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்களும் நிர்வாகிகளும் ஒன்றுதிரண்டு எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் இந்தப் படத்தை வெளியிடக் கூடாது என முதல்வருக்கு கோரிக்கையும் வைத்தனர்.

    இப்படி ஒரு பலமான எதிர்ப்பு கிளம்பும் என்பதை எதிர்ப்பாராத படக்குழுவினர் திகைத்து நிற்கின்றனர். இப்போது படத்தைத் தயாரிக்கும் பொறுப்பிலிருந்து லைகாவை விலக்கிவிட முருகதாஸும் விஜய்யும் முடிவு செய்துள்ளனர்.

    அவர்களுக்கு பதில் ஏற்கெனவே முருகதாஸின் கூட்டாளிகளான பாக்ஸ் ஸ்டார் நிறுவனத்தைச் சேர்த்துக் கொள்ளவும் முடிவெடுத்துள்ளார்களாம்.

    English summary
    A R Murugadass and actor Vijay have decided to drop Lyca productions from Kaththi project.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X