Don't Miss!
- News ‛‛வேஸ்ட் செய்யாத’’.. நமக்கு ஓட்டு போடுறவங்களுக்கு மட்டும் பணம் கொடு.. அதிமுக வேட்பாளரால் சர்ச்சை
- Automobiles உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- Sports சின்னவனை மீண்டும் சேர்க்காத டெல்லி.. குட்டி சச்சினுக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சி கொடுத்த ரிஷப் பண்ட்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
கத்தியிலிருந்து லைகாவைக் கழற்றிவிட விஜய், முருகதாஸ் முடிவு!
சென்னை: கத்தி படத்துக்கு தமிழுணர்வாளர்கள், ஈழ ஆதரவு கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள பெரும் எதிர்ப்பு காரணமாக, அந்தப் படத்தின் தயாரிப்பாளர் லைகா நிறுவனத்தை கழற்றிவிட இயக்குநர் முருகதாஸும், நடிகர் விஜய்யும் முடிவு செய்துள்ளனர்.
இந்தப் படத்தின் தயாரிப்புப் பொறுப்பை பாக்ஸ் ஸ்டுடியோ நிறுவனம் ஏற்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கத்தி படத்தை முதலில் அய்ங்கரன் நிறுவனம்தான் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அய்ங்கரன் வழிகாட்டுதலோடு லைகா நிறுவனம் தயாரிக்கும் என அறிவித்தார்கள். அப்போதிலிருந்து எதிர்ப்பு வலுக்க ஆரம்பித்தது.
லைகா நிறுவனம், அதன் பின்னணி, இலங்கை அரசில் இந்த நிறுவனத்துக்கு உள்ள செல்வாக்கு, ராஜபக்சே குடும்பத்துடன் லாகாவுக்கு உள்ள தொழில் முறை உறவுகள்.. என அனைத்தையும் ஆதாரங்களோடு முன் வைத்தது மீடியா.
ஆனால், இதனை பலமாக மறுத்து வந்த ஏ ஆர் முருகதாஸ், லைகா நிறுவனத்துக்கு பெரும் ஆதரவு அளித்து வந்தார். அந்த நிறுவனத்துக்கு படம் இயக்குமாறு வேறு இயக்குநர்களையும் கேட்டுக் கொண்டார்.
இந்த நிலையில் கத்தி படத்துக்கு எதிராக 65 அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்களும் நிர்வாகிகளும் ஒன்றுதிரண்டு எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் இந்தப் படத்தை வெளியிடக் கூடாது என முதல்வருக்கு கோரிக்கையும் வைத்தனர்.
இப்படி ஒரு பலமான எதிர்ப்பு கிளம்பும் என்பதை எதிர்ப்பாராத படக்குழுவினர் திகைத்து நிற்கின்றனர். இப்போது படத்தைத் தயாரிக்கும் பொறுப்பிலிருந்து லைகாவை விலக்கிவிட முருகதாஸும் விஜய்யும் முடிவு செய்துள்ளனர்.
அவர்களுக்கு பதில் ஏற்கெனவே முருகதாஸின் கூட்டாளிகளான பாக்ஸ் ஸ்டார் நிறுவனத்தைச் சேர்த்துக் கொள்ளவும் முடிவெடுத்துள்ளார்களாம்.