விஜய், பிரகாஷ்ராஜ் உதவியால் புற்றுநோயிலிருந்து மீண்டு வந்த இயக்குநர் ரமணா.. குரலை இழந்தார்!

தொடர்ந்து ஆதி, தனுஷின் சுள்ளான் போன்ற படங்களை இயக்கியவர், குதிரை என்ற படத்தை ஆரம்பித்தார்.
ஆனால் அதன் பிறகு அவரைப் பற்றி தகவலே இல்லாமல் போனது. தமிழ் சினிமாவும் அவரை மறந்தே போனது.
இதோ... மீண்டும் வந்திருக்கிறார் ரமணா. ஆனால் முன்பு போல கணீரென அவரால் பேச முடியவில்லை. காரணம், தொண்டைப் புற்று நோய் தாக்கியதில் கஷ்டப்பட்டு உயிரைக் காப்பாற்றிக் கொண்டவரால், குரலை காப்பாற்ற முடியவில்லை.
புற்று நோய்க்காக தீவிர சிகிச்சைப் பெற்று வந்த இவர், வீட்டை விட்டு வெளியில் வராமல் இருந்தார். தொண்டைக் குழி அருகே ஒரு பெரிய ஓட்டை போடப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார்.
இப்போது அவரது வாய்ஸ் பாக்ஸ் அகற்றப்பட்டுள்ளது. பூரண குணம் அடைந்திருக்கிறார். ஆனாலும், முன்புபோல பேச முடியவில்லை.
தொண்டை ஓட்டையை அடைத்துக் கொண்டால் கிகிசுவென அவர் பேசுவது கேட்கிறது.
ஆனால் நம்பிக்கையை மட்டும் அவர் இழக்கவில்லை. அடுத்த படத்துக்கான வேலைகளில் தீவிரமாகியுள்ளார். இவரது சிகிச்சைக்காக நடிகர் விஜய், பிரகாஷ்ராஜ் போன்றவர்கள்தான் பெரிதும் உதவியிருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











