சரித்திரப் பின்னணியில் உருவாகும் விஜய்யின் 58வது படம்!
சிம்பு தேவன் இயக்கத்தில் உருவாகும் விஜய்யின் 58வது படம் குறித்து புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்தப் படம் கற்பனை சரித்திரப் பின்னணியில் உருவாகிறது என்பது முதல் தகவல். அந்த வகையில் விஜய் நடிக்கும் முதல் சரித்திரப் படம் இது எனலாம்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு நேரடித் தமிழ்ப் படத்தில் நடிக்கிறார் ஸ்ரீதேவி. இதில் ஒரு சமஸ்தானத்தின் ராணியாக வருகிறார் ஸ்ரீதேவி. அந்த சமஸ்தானம் ஆபத்தில் சிக்கும் தருணத்தில், காப்பாற்றும் வீரனாக வருகிறாராம் விஜய்.
இந்தப் படத்தில் இன்னொரு சிறப்பு நான் ஈ புகழ் கிச்சா சுதீப் முக்கிய வேடத்தில், அதாவது விஜய்யின் குருவாக நடிக்கிறாராம்.
நாயகியாக தீபிகா படுகோன், ஸ்ருதி ஹாஸன் நடிக்கிறார்கள் என்றெல்லாம் சொல்லப்பட்டது. யாரும் உறுதியாகவில்லை. இப்போது ஹன்சிகா நடிப்பார் என்று தெரிகிறது. ஏற்கெனவே வேலாயுதம் படத்தில் விஜய்யுடன் நடித்திருக்கிறார் ஹன்சிகா.
தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க, நடிகரும் ஒளிப்பதிவாளருமான நட்டி சுப்பிரமணியன் கேமராவைக் கையாள்கிறார்.
படம் வரும் செப்டம்பரில் தொடங்குகிறது.


Click it and Unblock the Notifications











