விஜய்யின் அப்பாவுக்கு இப்படியொரு லவ் எக்ஸ்பீரியன்ஸா?
சென்னை : இசையமைப்பாளர் சிற்பியின் மகன் நந்தன் ராம், வெண்பா, கே.எஸ்.ரவிக்குமார், ஊர்வசி, கஞ்சா கருப்பு, தம்பி ராமையா ஆகியோர் நடித்திருக்கும் படம் 'பள்ளி பருவத்திலே'.
வாசுதேவ் பாஸ்கர் இயக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் கலந்துகொண்டார்.
தனது பள்ளிக் காலத்தில் உருவான காதல் பற்றி அந்த விழாவில் பகிர்ந்துகொண்டுள்ளார் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர்.

எட்டாவது படிக்கும்போது காதல் :
'நான் பரமக்குடி, காமன்கோட்டையில் எட்டாவது படிக்கும் போது ஒரு பெண்ணைக் காதலித்தேன். அவள் பார்ப்பதற்கு தேவதை போலத் தெரிந்தாள். நானும் கடிதம் கொடுக்க, அவளும் தந்தாள்.

மாஸ்டரை அடித்தோம் :
அவளை என் மாஸ்டர் சைட் அடித்தார். என் நண்பர்களோடு சேர்ந்து அவரை உருட்டுக்கட்டையால் அடித்தோம். இது பெரிய விஷயமாகி ஊர் பஞ்சாயத்துக்கு இழுத்துக்கொண்டு போய்விட்டார்கள்.

அவள் சொன்னால் :
ஊரைவிட்டுப் போய்விடுங்கள் என பஞ்சாயத்தில் கூறினார்கள். 'அப்பெண்ணைக் கூப்பிடுங்கள், அவள் என்னைக் காதலிக்கவில்லை என சொல்லட்டும். அப்புறம் நீங்கள் சொன்னபடி ஊரைவிட்டு போய்விடுகிறோம்' என்றேன்.

ட்விஸ்ட் :
எதிர்பாராத விதமாக அப்பெண் என்னை யார் என்றே தெரியாது எனச் சொன்னது என் நண்பர்களுக்கு பெரிய ஷாக். காதலுக்கு எதையும் செய்யும் துணிவு அப்போது தான் வரும். இது போது யதார்த்தமான காதல் கொண்ட இப்படத்தை காதலர்களுக்குப் பிடிக்கும்' என எஸ்.ஏ.சந்திரசேகர் கூறினார்.


Click it and Unblock the Notifications











