கத்தியில் நச்சென்று பஞ்ச் விடும் 'மாஸ்' விஜய்
சென்னை: கத்தி படத்தில் விஜய்க்கு ஏற்றவாறு பஞ்ச் வசனங்களை வைக்கிறாராம் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ்.
துப்பாக்கி படத்தை அடுத்து ஏ.ஆர். முருகதாஸ், விஜய் சேர்ந்து கத்தி படத்தில் பணியாற்றுகிறார்கள். படப்பிடிப்பு திட்டமிட்டபடி வேகமாக நடந்து வருகிறது.

கத்தி படத்தின் தயாரிப்பாளர் தொடர்பாக சர்ச்சை எழுந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் படத்தில் விஜய்யின் மாஸ் ஹீரோ ஸ்டேட்ஸுக்கு ஏற்றவாறு பஞ்ச் வசனங்கள் வைக்கிறாராம் முருகதாஸ்.
பஞ்ச் வசனங்களுக்கும் விஜய்க்கும் அண்மை காலமாக ஏழாம் பொருத்தமாக உள்ளது. அவர் பாட்டுக்கு படத்தில் ஏதாவது பஞ்ச் விட அது அவருக்கே திரும்பி வந்துவிடுகிறது. இந்நிலையில் கத்தி படத்தில் நச்சென்று பஞ்ச் வைக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கத்தி படம் தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸாகவிருக்கிறது. படத்திற்கு 'கொலவெறி' புகழ் அனிருத் இசையமைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











