சமூக வலைதளங்களில் வெறித்தனமாக வைரலாகும் விஜய் பாடிய 'வெறித்தனம்' பாடல்
சென்னை: பிகில் திரைப்படத்துக்காக ஏ.ஆர். ரஹ்மான் இசையில் நடிகர் விஜய் பாடிய வெறித்தனம் பாடல் சமூக வலைதளங்களில் படுவைரலாக ஹிட்டடித்துக் கொண்டிருக்கிறது.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் பிகில். இப்படத்துக்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்துள்ளார்.

ஏ.ஆர். ரஹ்மான் இசையில் விஜய் முதன்முறையாக பாடிய வெறித்தனம் பாடல் இன்று வெளியிடப்பட்டது. இப்பாடல் வெளியான சில நிமிடங்களிலேயே பல லட்சம் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகின்றன.
இப்பாடலில் இடம் பெற்றுள்ள கருப்பா கலையா இருப்போம் ஒன்னா உசுரா இருப்போம் வரிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும் அவன் வரவரைக்கும் வாய்ஸ கொடுத்து நண்டு சிண்டு தொகுருது; அவன் எழுந்து கிழுந்து வந்தானா இந்த தீபாவளி நம்பள்து என்கிற வரிகள் விஜய்-ன் அரசியல் வருகையை குறிக்கிறதா? என்கிற விவாதத்தையும் எழுப்பியுள்ளது.


Click it and Unblock the Notifications











