Don't Miss!
- Finance ஓரே நாளில் 4.2 கோடி சம்பாதித்த நாராயணமூர்த்தி-யின் 5 மாத பேரன்.. எப்படி..?
- News 4 மணி வரை உக்கிரமா இருப்பேன்! சுட்டெரிக்கும் வெயில்..வயதானவர்களுக்கு வார்னிங்! எப்போது வாக்களிப்பது?
- Technology இப்படியொரு புரொஜெக்டர் யாரும் பார்த்ததில்லை.. 32GB மெமரி.. 1080P ரெசல்யூஷன்.. எந்த மாடல்? என்ன விலை?
- Lifestyle தினமும் 10 பவுன் தங்கத்தை தூசியாக உமிழும் அதிசய எரிமலை... இந்த எரிமலையா இல்ல தங்கச்சுரங்கமானே தெரிலயே...!
- Automobiles ஹெல்மெட் போடாமல் பைக்கில் போன விஜய் சேதுபதி! ஓட்டு போட வந்த இடத்தில் மானமே போச்சு!
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சுந்தர் சி படம்... 250 கோடி பட்ஜெட்... ஆனாலும் நோ சொன்ன விஜய்?
ரூ 250 கோடியில் சங்கமித்ரா என்ற படத்தை சுந்தர் சி உருவாக்கவிருப்பதாகவும், அதில் நாயகனாக விஜய் நடிக்கப் போகிறார் என்றும் சில மாதங்களுக்கு முன்பு வரை பரபரப்பாக மீடியா பேசிக் கொண்டிருந்தது நினைவிருக்கலாம்.
ஆனால் அந்தப் படத்தில் நடிக்காமல் விஜய் விலகிக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தில் நடிக்காமல் விஜய் விலகியதற்கு சில காரணங்களைச் சொல்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.
முதல் காரணம், பட்ஜெட். விஜய்யின் படங்களின் அதிகபட்ச பட்ஜெட் 40லிருந்து 60 கோடிகள்தான். இந்த பட்ஜெட்டில் எடுத்த புலி பெரிய அடிவாங்கியது. தெறி படம் செங்கல்பட்டு ஏரியாவில் வெளியாகாததால் பெரும் இழப்பைச் சந்தித்தார் கலைப்புலி தாணு. எனவே இவ்வளவு அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்டால், அதை எப்படி வசூலிப்பார்கள் என்ற தயக்கம் விஜய்க்கு உள்ளதாம்.
அடுத்து விஜய்யின் இப்போதைய நிலைப்பாடு, ஆண்டுக்கு குறைந்தது 2 படங்களாவது தர வேண்டும் என்பது. சுந்தர் சியின் இந்த சரித்திரப் படம் வெளிவர குறைந்தது ஒன்றரை ஆண்டுகளாவது ஆகும். இவ்வளவு பெரிய கேப் சரிவருமா என்ற யோசனை அவரை இந்தப் படத்துக்கு நோ சொல்லவைத்துள்ளது.
எல்லாவற்றையும் விட, இந்தியாவின் மிகப் பெரிய வெற்றிப் படமாகிவிட்ட கபாலியை இயக்கிய ரஞ்சித் இயக்கத்தில் ஒரு படத்தை நடிக்க விஜய் விரும்ப, அதற்கு ரஞ்சித்தும் சம்மதம் சொல்லிவிட்டார். அந்தப் படத்தையும் கலைப்புலி தாணுவே தயாரிக்கும் சூழல் இருப்பதால், இப்போதைக்கு சுந்தர் சி படத்தில் 'லாக்' ஆகிவிட வேண்டாம் என முடிவெடுத்திருக்கிறாராம் விஜய்.