Don't Miss!
- Automobiles சாதாரணமாவே இந்த மாருதி காரை வீட்டுக்கு மளிகை சாமான் வாங்குற மாதிரி வாங்கிட்டு இருக்காங்க.. இதுல இது வேறையா!
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
ரொம்ப வயசாகிவிட்டது என்றவர்களின் பேச்சை கேட்காத கோமதிக்கு விஜய் சேதுபதி ரூ. 5 லட்சம்
Recommended Video
சென்னை: தங்க மங்கை கோமதி மாரிமுத்துவுக்கு ரூ. 5 லட்சம் அளித்துள்ளார் விஜய் சேதுபதி.
தோஹாவில் நடந்த 23வது ஆசிய தடகள போட்டியில் 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து தங்கம் வென்றார். அவருக்கு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கோமதிக்கு ரொக்கப் பரிசு அளித்துள்ளார் விஜய் சேதுபதி.
என்.ஜி.கே. உண்மையிலேயே செல்வராகவன் படமா?: ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சு
விஜய் சேதுபதி
கோமதி மாரிமுத்துவுக்கு ரூ. 5 லட்சத்திற்கான காசோலையை தனது ரசிகர் மன்ற நிர்வாகிகள் மூலம் அளித்துள்ளார் விஜய் சேதுபதி. மேலும் கோமதியிடம் போன் மூலம் பேசி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
லாபம்
விஜய் சேதுபதி லாபம் படப்பிடிப்பில் இருப்பதால் கோமதியை நேரில் சந்திக்க முடியவில்லை. இருப்பினும் உடனே அவருக்கு உதவி செய்ய நினைத்து ரசிகர் மன்ற நிர்வாகிகளை அனுப்பி வைத்துள்ளார்.
ரோபோ ஷங்கர்
முன்னதாக ரோபோ ஷங்கர் கோமதிக்கு ரூ. 1 லட்சம் அளித்தார். திரையுலக பிரபலங்கள் வாழ்த்துவதோடு நின்றுவிடாமல் அவர் தொடர்ந்து சாதிக்க உதவியாக நிதியுதவி அளிப்பது பாராட்டுக்குரியது.
|
ஜி.வி. பிரகாஷ்
ஜி.வி. பிரகாஷ் குமார் கோமதியை நேரில் சந்தித்து பாராட்டியதோடு விளையாட்டு உபகரணங்களை பரிசளித்தார். வயது அதிகமாகுகிறது திருமணம் செய் என்று உறவினர்களும், தெரிந்தவர்களும் கூறியதை கோமதி கேட்காமல் இருந்தது நல்லதாகிவிட்டது. இல்லை என்றால் இப்படி தங்க மங்கையாகி இருக்க முடியுமா?