Don't Miss!
- Lifestyle இந்த பட்டனை அழுத்தினால் கார் உடனடியாக கூலிங் ஆகிடும்... இது பலருக்கும் தெரியாத விஷயம்..!
- Automobiles 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
- Sports ஐதராபாத் ரசிகர்களுக்கு அதிர்ச்சி.. ஹெட், அபிஷேக் சர்மா சோலி முடிஞ்ச்.. நம்ம ஆர்சிபி பவுலிங்கா இது!
- News மற்றொரு "வேங்கைவயல்" சம்பவம்? குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம்? கந்தவர்கோட்டை அருகே பகீர்
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
ரொம்ப வயசாகிவிட்டது என்றவர்களின் பேச்சை கேட்காத கோமதிக்கு விஜய் சேதுபதி ரூ. 5 லட்சம்
Recommended Video
சென்னை: தங்க மங்கை கோமதி மாரிமுத்துவுக்கு ரூ. 5 லட்சம் அளித்துள்ளார் விஜய் சேதுபதி.
தோஹாவில் நடந்த 23வது ஆசிய தடகள போட்டியில் 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து தங்கம் வென்றார். அவருக்கு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கோமதிக்கு ரொக்கப் பரிசு அளித்துள்ளார் விஜய் சேதுபதி.
என்.ஜி.கே. உண்மையிலேயே செல்வராகவன் படமா?: ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சு
விஜய் சேதுபதி
கோமதி மாரிமுத்துவுக்கு ரூ. 5 லட்சத்திற்கான காசோலையை தனது ரசிகர் மன்ற நிர்வாகிகள் மூலம் அளித்துள்ளார் விஜய் சேதுபதி. மேலும் கோமதியிடம் போன் மூலம் பேசி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
லாபம்
விஜய் சேதுபதி லாபம் படப்பிடிப்பில் இருப்பதால் கோமதியை நேரில் சந்திக்க முடியவில்லை. இருப்பினும் உடனே அவருக்கு உதவி செய்ய நினைத்து ரசிகர் மன்ற நிர்வாகிகளை அனுப்பி வைத்துள்ளார்.
ரோபோ ஷங்கர்
முன்னதாக ரோபோ ஷங்கர் கோமதிக்கு ரூ. 1 லட்சம் அளித்தார். திரையுலக பிரபலங்கள் வாழ்த்துவதோடு நின்றுவிடாமல் அவர் தொடர்ந்து சாதிக்க உதவியாக நிதியுதவி அளிப்பது பாராட்டுக்குரியது.
|
ஜி.வி. பிரகாஷ்
ஜி.வி. பிரகாஷ் குமார் கோமதியை நேரில் சந்தித்து பாராட்டியதோடு விளையாட்டு உபகரணங்களை பரிசளித்தார். வயது அதிகமாகுகிறது திருமணம் செய் என்று உறவினர்களும், தெரிந்தவர்களும் கூறியதை கோமதி கேட்காமல் இருந்தது நல்லதாகிவிட்டது. இல்லை என்றால் இப்படி தங்க மங்கையாகி இருக்க முடியுமா?