Don't Miss!
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Automobiles சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
- Lifestyle மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
'நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம்' ஒளிப்பதிவாளர் இயக்கத்தில் விஜய் சேதுபதி?
சென்னை: 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தின் ஒளிப்பதிவாளர் பிரேம்குமாரின் புதிய படத்தில் விஜய் சேதுபதி நடிக்கப் போவதாக கூறப்படுகிறது.
விஜய் சேதுபதி கையில் தற்போது 10 படங்கள் இருக்கின்றன. இதில் 'மெல்லிசை', 'இடம் பொருள் ஏவல்', 'தர்மதுரை' ஆகிய படங்கள் வெளியீட்டிற்கு தயாராக உள்ளன.
'றெக்க', 'வட சென்னை', 'ஆண்டவன் கட்டளை' போன்ற படங்களில் நடித்து வருகிறார். அடுத்ததாக 'நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம்' ஒளிப்பதிவாளர் பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கப் போவதாக செய்திகள் அடிபடுகின்றன.
நீண்டநாட்களாக பேச்சுவார்த்தையில் இருந்த இப்படத்தில் நடிக்க விஜய் சேதுபதி சமீபத்தில் ஒப்புக் கொண்டதாகவும், இதனால் பிற நடிக, நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களை தேர்வு செய்யும் பணியில் பிரேம் குமார் மும்முரமாக இறங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
விஜய் சேதுபதிக்கு சமமான வேடத்தில் நடிக்க ஒரு மூத்த நடிகையை பிரேம் குமார் தேடி வருகிறாராம். கூடிய விரைவில் இப்படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.