Don't Miss!
- News பரங்கிமலை-வேளச்சேரி பறக்கும் ரயில் பாதை எப்போது முடியும்? சரியாக கணித்தால் லைஃப் டைம் செட்டில்மெண்ட்
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
'நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம்' ஒளிப்பதிவாளர் இயக்கத்தில் விஜய் சேதுபதி?
சென்னை: 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தின் ஒளிப்பதிவாளர் பிரேம்குமாரின் புதிய படத்தில் விஜய் சேதுபதி நடிக்கப் போவதாக கூறப்படுகிறது.
விஜய் சேதுபதி கையில் தற்போது 10 படங்கள் இருக்கின்றன. இதில் 'மெல்லிசை', 'இடம் பொருள் ஏவல்', 'தர்மதுரை' ஆகிய படங்கள் வெளியீட்டிற்கு தயாராக உள்ளன.
'றெக்க', 'வட சென்னை', 'ஆண்டவன் கட்டளை' போன்ற படங்களில் நடித்து வருகிறார். அடுத்ததாக 'நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம்' ஒளிப்பதிவாளர் பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கப் போவதாக செய்திகள் அடிபடுகின்றன.
நீண்டநாட்களாக பேச்சுவார்த்தையில் இருந்த இப்படத்தில் நடிக்க விஜய் சேதுபதி சமீபத்தில் ஒப்புக் கொண்டதாகவும், இதனால் பிற நடிக, நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களை தேர்வு செய்யும் பணியில் பிரேம் குமார் மும்முரமாக இறங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
விஜய் சேதுபதிக்கு சமமான வேடத்தில் நடிக்க ஒரு மூத்த நடிகையை பிரேம் குமார் தேடி வருகிறாராம். கூடிய விரைவில் இப்படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.