Don't Miss!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Automobiles தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- News தமிழ்நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு சம்பளம் எவ்வளவு.. இவ்வளவு சலுகைகளா? ஆச்சர்யமான தகவல்கள்
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
விஜய் சேதுபதி நீங்க இவ்வளவுதானா?.. மீண்டும் கிளம்பிய "அந்த" சர்ச்சை!
சென்னை: சினிமா ஹீரோக்களை இறை தூதனுக்கு நிகராக கொண்டாடுபவன் இந்தியன். அதிலும் தமிழகத்தில் இந்த கூத்துக் கொடுமையெல்லாம் கேக்கவே வேணாம். அந்த மாஸ் ஹீரோக்களில் சிலரை தங்கள் தலைவனாகவும், இனத்தை மீட்க வந்த போராளியாகவுமெல்லாம் சித்தரித்துக் கொண்டாடிடுவான்.
எம்.ஜி.ஆர்., ரஜினி, விஜயகாந்த் வரிசையில் சமீபத்தில் தமிழ் சினிமா ரசிகனால் 'தலைவன்' எனும் வார்த்தையால் கொண்டாடப்பட துவங்கி இருப்பவர் விஜய் சேதுபதி.
இந்நிலையில், இலங்கையை சேர்ந்த தமிழ் வம்சாவளி கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் பயோபிக்கில் ஹீரோவாக நடிக்க விஜய்சேதுபதி கமிட் ஆகியிருந்தார். இதற்கு விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட தமிழ் அமைப்புகளும், சர்வதேச தமிழ் உணர்வாளர்களும் மிக கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர்.
காரணமாக, 'முத்தையா முரளிதரன் தன்னை எப்போதும் சிங்கள மனிதராகவேதான் எண்ணுகிறார். அவருக்கு தமிழர்களையும், அவர்களின் உணர்வுகளையும் மதிக்க தெரியாது. ஈழ இறுதிப் போருக்குப் பின், இலங்கையில் அமைதி திரும்பிவிட்டதாக சொல்லியவர். எனவே அவரை பற்றிய படத்தில், சுத்த தமிழனான விஜய் சேதுபதி நடிக்க கூடாது.' என்று கடுமையாக கொதித்தனர்.
விஜய் சேதுபதியும் யோசித்தார், அந்தப் பட கதை விவாதத்திலிருந்து நகர்ந்தார். உடனே 'தமிழர்களின் உணர்வை புரிந்து கொண்டுவிட்டார் வி.சேதுபதி. பணத்தை விட இனமே முக்கியமென போற்றும் நாயகன்.' என்றெல்லாம் அவரை கொண்டாடினர்.
பொண்ணு கிட்ட தப்பா பேசுறதும் பாலியல் வன்முறை தான்- ஸ்ரத்தா ஸ்ரீநாத்
ஆனால் லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால், விஜய் சேதுபதி ஒன்றும் அப்படத்திலிருந்து விலகவில்லையாம். கமிட் ஆனபடியேதான் இருக்கிறாராம். என்ன ஒன்று, தொடர்ந்து நடிக்க வேண்டியிருப்பதால் அப்படத்தில் நடிப்பதை ஆறு மாதங்களுக்கு தள்ளி வைத்துள்ளாராம்!
அப்படியா விஜய் சேதுபதி? அவ்வளவுதானா நீங்கள்?.....என்கிறார்கள் உணர்வாளர்கள்.
என்னத்த சொல்ல!
- தாமிரா