Don't Miss!
- Finance ஐசிஐசிஐ வங்கி கஸ்டமரா நீங்க.. மொபைல் ஆப்-ல் கோளாறு.. கிரெடிட் கார்டு தரவுகள் திருடுபோகும் அச்சம்!!
- Lifestyle சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- Automobiles புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- News நேருவும், இந்திராவும் முட்டாள்கள் இல்லை.. பாஜகவின் மொழி கொள்கைக்கு ஜேஎன்யு துணைவேந்தர் எதிர்ப்பு
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
விஜய் சேதுபதி நீங்க இவ்வளவுதானா?.. மீண்டும் கிளம்பிய "அந்த" சர்ச்சை!
சென்னை: சினிமா ஹீரோக்களை இறை தூதனுக்கு நிகராக கொண்டாடுபவன் இந்தியன். அதிலும் தமிழகத்தில் இந்த கூத்துக் கொடுமையெல்லாம் கேக்கவே வேணாம். அந்த மாஸ் ஹீரோக்களில் சிலரை தங்கள் தலைவனாகவும், இனத்தை மீட்க வந்த போராளியாகவுமெல்லாம் சித்தரித்துக் கொண்டாடிடுவான்.
எம்.ஜி.ஆர்., ரஜினி, விஜயகாந்த் வரிசையில் சமீபத்தில் தமிழ் சினிமா ரசிகனால் 'தலைவன்' எனும் வார்த்தையால் கொண்டாடப்பட துவங்கி இருப்பவர் விஜய் சேதுபதி.
இந்நிலையில், இலங்கையை சேர்ந்த தமிழ் வம்சாவளி கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் பயோபிக்கில் ஹீரோவாக நடிக்க விஜய்சேதுபதி கமிட் ஆகியிருந்தார். இதற்கு விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட தமிழ் அமைப்புகளும், சர்வதேச தமிழ் உணர்வாளர்களும் மிக கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர்.
காரணமாக, 'முத்தையா முரளிதரன் தன்னை எப்போதும் சிங்கள மனிதராகவேதான் எண்ணுகிறார். அவருக்கு தமிழர்களையும், அவர்களின் உணர்வுகளையும் மதிக்க தெரியாது. ஈழ இறுதிப் போருக்குப் பின், இலங்கையில் அமைதி திரும்பிவிட்டதாக சொல்லியவர். எனவே அவரை பற்றிய படத்தில், சுத்த தமிழனான விஜய் சேதுபதி நடிக்க கூடாது.' என்று கடுமையாக கொதித்தனர்.
விஜய் சேதுபதியும் யோசித்தார், அந்தப் பட கதை விவாதத்திலிருந்து நகர்ந்தார். உடனே 'தமிழர்களின் உணர்வை புரிந்து கொண்டுவிட்டார் வி.சேதுபதி. பணத்தை விட இனமே முக்கியமென போற்றும் நாயகன்.' என்றெல்லாம் அவரை கொண்டாடினர்.
பொண்ணு கிட்ட தப்பா பேசுறதும் பாலியல் வன்முறை தான்- ஸ்ரத்தா ஸ்ரீநாத்
ஆனால் லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால், விஜய் சேதுபதி ஒன்றும் அப்படத்திலிருந்து விலகவில்லையாம். கமிட் ஆனபடியேதான் இருக்கிறாராம். என்ன ஒன்று, தொடர்ந்து நடிக்க வேண்டியிருப்பதால் அப்படத்தில் நடிப்பதை ஆறு மாதங்களுக்கு தள்ளி வைத்துள்ளாராம்!
அப்படியா விஜய் சேதுபதி? அவ்வளவுதானா நீங்கள்?.....என்கிறார்கள் உணர்வாளர்கள்.
என்னத்த சொல்ல!
- தாமிரா