Don't Miss!
- Sports "இந்தியாவின் ஒரே பாட்ஷா" சச்சினின் 51வது பிறந்தநாள்.. கொண்டாடும் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா!
- Finance தங்கம் விலை இறங்கிய வேகத்தில் ஏறியது.. ஒவ்வொரு நிமிடமும் முக்கியம்..!!
- News சூப்பரான சான்சை விட்டுடாதீங்க.. முக்கிய ராசிக்கு அடிக்க போகும் பம்பர் யோகம்.. குரு பெயர்ச்சி பலன்கள்
- Technology இதுதாங்க பட்ஜெட்.. ரூ.9999 போதும்.. 12GB ரேம்.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Lifestyle சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் மே 19 வரை இந்த ராசிக்காரர்களுக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
விஜய் சேதுபதி வந்தியத்தேவனாக நடிக்க விருப்பப்பட்டார்... பார்த்திபன் கூறிய தகவல்
சென்னை: சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதி லயோலா கல்லூரியில் பேசிய பேச்சு வைரலாகியுள்ளது
சிலர் அந்தப் பேச்சை விமர்சனம் செய்திருந்தாலும் பலரும் அதனை பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில், பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் கார்த்தி நடித்திருந்த வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்க ஆசைப்பட்டதாக பார்த்திபன் கூறியிருக்கிறார்
விஜய் – மிஷ்கின் கூட்டணியில் இப்படியொரு சம்பவமா… தளபதி 67 அபிஸியல் அப்டேட்டுக்கு ரெடியான லோகேஷ்
ரஜினியின் பேச்சு
பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் புரமோஷனை பொருத்தவரை மிகப்பெரிய புரமோஷன் எதுவென்றால் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதுதான். ஒரு சாதாரண நடிகர் எனக்கு ரியாக்க்ஷன் வரவில்லை என்று கூறினால் நடிக்க தெரியவில்லை என்று கிண்டலடித்து விமர்சிக்கப்படுவார். ஆனால் உயர்ந்த இடத்தில் இருக்கும் ரஜினி தனக்கு தளபதி படத்தில் எக்ஸ்பிரஷன் கொடுக்க தெரியவில்லை என்று கூறியபோது, அவருடைய எளிமை தெரிந்தது. நிலை உயரும் போது பணிவு கொள்ள வேண்டும் என்ற வாக்கியத்திற்கு ஏற்றார் போல ரஜினியின் பேச்சு இருந்தது. அது ஒரு வரலாற்றுப் பேச்சு என்று பார்த்திபன் கூறியிருக்கிறார்.
ஐஸ்வர்யா ராய் நட்பு
இந்தப் படத்தில் நடிக்கும் பொழுது ஐஸ்வர்யா ராயை தான் அதிகமாக கவனித்ததாகவும், நீங்கள் என்னை கவனித்துக் கொண்டே இருக்கிறீர்கள் என்று ஐஸ்வர்யா தன்னிடம் கூறியபோது இப்போது மட்டுமல்ல மேடையில் நீங்களும் உங்கள் கணவரும் இருக்கும்போது நடக்கும் சின்ன சின்ன விஷயங்கள் முதற்கொண்டு உங்களது மாமியார் உங்களை எப்படி பார்க்கிறார்கள் என்பது வரை நான் கவனித்திருக்கிறேன் என்று பார்த்திபன் கூறியிருக்கிறார்.
ஒத்த செருப்பு
சில ஆண்டுகளுக்கு முன்னரே வேறு நிகழ்ச்சிகளில் ஒன்றாக பங்கெடுத்துள்ளார்கள் பார்த்திபன் மற்றும் ஐஸ்வர்யா ராய். மேலும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் படப்பிடிப்பின் போதுதான் ஒத்த செருப்பு திரைப்படத்தை ஐஸ்வர்யாவுக்கு போட்டு காண்பித்ததாகவும், அதன் பின்னர் அபிஷேக் பச்சன், அமிதாப்பச்சன் என்று வரிசையாக பார்த்து பின்னர் அமிதாப்பச்சன் தயாரிப்பில் அபிஷேக் அதன் ரீமேக்கில் நடிக்கும் அளவிற்கு தங்களுடைய நட்பு வளர்ந்தது என்று பார்த்திபன் கூறியிருக்கிறார். இசை வெளியீட்டு விழாவில் கூட லேடீஸ் ஃபர்ஸ்ட் என்று ஐஸ்வர்யாவை முன்னே நடக்கச் சொல்ல, பார்த்திபனின் முதுகை தள்ளிவிட்டு ஐஸ்வர்யா ராய் பின்னே நடந்தது இணையதளத்தில் பிரபலமானது
விஜய் சேதுபதி
இந்நிலையில் எண்பதுகளின் தொடக்கத்தில் ரஜினிகாந்த் வந்தியத்தேவனாக நடித்தால் நன்றாக இருக்கும் என்று எப்படி கூறினார்களோ, அதேபோல 90-களின் தொடக்கத்தில் அதனை எடுத்தால் தனக்கு கூட அதில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கும். என்னுடைய நிஜ கதாபாத்திரத்தை ஒட்டி அமைந்ததுதான் வந்தியத்தேவன் கதாபாத்திரம். அதனால் எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்திருக்கக் கூடும். இப்போதுள்ள நடிகர்களில் விஜய் சேதுபதிக்கு வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடிக்க விருப்பம் இருந்ததாக கூறப்படுகிறது என்று பார்த்திபன் பல சுவாரஸ்யமான விஷயங்களை ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.