Don't Miss!
- News கேம் சேஞ்சர் ஆக போகும் நாம் தமிழர்.. இந்த தொகுதிகளில் மொத்தமாக முடிவே மாற போகுது.. அப்போ அதிமுக?
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Technology ரூ.17,000 பட்ஜெட்ல பரபரப்பு! 70W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 24GB ரேம், 1TB மெமரி, 5G ஆதரவு.. ஏப்.4 முதல் SALE!
- Sports ரூ.8.4 கோடியை மறந்துவிடு.. உன்னோட வேலை அதுமட்டும் தான்.. தோனியின் வார்த்தை குறித்து சிஎஸ்கே சிங்கம்!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
விஜய்க்கு வில்லனாக நடிக்க ஏன் சம்மதித்தேன்.. மாஸ்டர் படம் குறித்து மனம் திறந்த விஜய் சேதுபதி!
Recommended Video
சென்னை: மாஸ்டர் படத்தில் தளபதி விஜய்க்கு வில்லனாக நடிக்க ஏன் சம்மதித்தேன் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார் விஜய் சேதுபதி.
சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகி வருகிறது மாஸ்டர்.
ஏப்ரல் 9ம் தேதி மாஸ்டர் திரைக்கு வரும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இம்மாத இறுதியில் படப்பிடிப்பு நிறைவடையும் என்றும் கூறுகின்றனர்.
கிளைமேக்ஸ்
மாஸ்டர் படத்தின் கிளைமேக்ஸ் சண்டை காட்சியுடன் ஷூட்டிங் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் தொடங்கிய ஷூட்டிங், டெல்லி, ஷிமோகா உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு, தற்போது மீண்டும் சென்னையில் நடைபெற்று வருகிறது. நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் கிளைமேக்ஸ் சண்டை காட்சி நடைபெறும் என்ற தகவலும் வெளியாகி இருந்தது.
விஜய்க்கு வில்லன்
கடந்த ஆண்டு வெளியான பேட்ட படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்த விஜய் சேதுபதி, மாஸ்டர் படத்தில் தளபதி விஜய்க்கு வில்லனாக நடித்து வருகிறார். மாஸ்டர் படத்தின் 3வது லுக் போஸ்டரில், விஜய் மற்றும் விஜய் சேதுபதி வெறித்தனமாக மோதிக் கொள்ளும் காட்சி ரசிகர்களிடையே வேற லெவலில் வைரலானது.
விஜய்சேதுபதி பேட்டி
காதலர் தினத்தை முன்னிட்டு ரிலீசாகவுள்ள அசோக் செல்வன், ரித்திகா சிங் நடிப்பில் உருவாகியுள்ள ஓ மை கடவுளே படத்தின் புரொமோஷனுக்காக யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள விஜய்சேதுபதி, விஜய்க்கு வில்லனாக நடிக்க ஏன் ஒப்புக் கொண்டேன் என்பதை முதன்முறையாக மனம் திறந்து கூறியுள்ளார்.
வில்லனாக ஏன்?
ஹீரோவாக நடித்து வந்தாலும், விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கவும் தான் தயங்க வில்லை என்றும், இமேஜ் பற்றிய கவலையோ, பயமோ தனக்கு இல்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும், லோகேஷ் கனகராஜ், அந்த கதாபாத்திரம் குறித்து விளக்கும் போது அவ்வளவு பிடித்திருந்ததாகவும் கூறியுள்ளார்.
மிஸ் பண்ணியிருப்பேன்
மேலும், இமேஜை எல்லாம் பார்த்துக் கொண்டு வில்லன் ரோல் வேண்டாம் நடிச்சா ஹீரோ தான் என்று பந்தா காட்டினால், அப்படி ஒரு மிரட்டலான கதாபாத்திரத்தை தனது வாழ்நாளில் மிஸ் பண்ணியிருப்பேன் என நடிகர் விஜய் சேதுபதி அந்த பேட்டியில் ஓப்பனாக கூறியுள்ளார்.
தல அஜித் உடன்
மேலும், தல அஜித் உடன் நடிப்பீங்களா? என்ற கேள்விக்கு, ஒரு நொடி சிரித்து விட்டு, அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தாலும், கண்டிப்பா ஓகே சொல்லி செய்வேன் எனவும் விஜய் சேதுபதி கூறியுள்ளார். மாஸ்டர் படத்தில் மெர்சலான வில்லனாக நடித்து வரும் விஜய் சேதுபதியை ஜாலியான கடவுளாக ஓ மை கடவுளே படத்தில் பார்க்கப் போகிறோம்.
அடுத்தடுத்து
அதுமட்டுமின்றி, விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி உள்ள கடைசி விவசாயி, லாபம், யாதும் ஊரே யாவரும் கேளிர், துக்ளக் தர்பார் என பல படங்கள் வரிசை கட்டி ரிலீசுக்கு ரெடியாகி வருகின்றன. இந்த ஆண்டு விஜய் சேதுபதிக்கு மிகப் பெரிய ஆண்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.