Just In
- 3 hrs ago
உங்களிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன்.. ரொம்ப நன்றி சார் கமலை சந்தித்த ரியோ.. டிவிட்டரில் உருக்கம்
- 4 hrs ago
என்னாது.. சுந்தர் .சியும் அங்கே வரப் போறாரா.. செம பரபரப்பு.. தலைவர்களுடன் தடாலடி சந்திப்பு!
- 5 hrs ago
அரசியல்வாதிகளின் உண்மை முகத்தை பார்த்தவன் – இயக்குநர் சுரேஷ் சண்முகம் பேட்டி!
- 7 hrs ago
கோடைக்காலம் தொடங்கிடுச்சுல்ல..பிகினியில் இன்ஸ்டாகிராமை அலறவிடும் வாரிசு நடிகை.. வைரலாகும் போட்டோஸ்!
Don't Miss!
- News
பிரதமரின் மோடியின் தாயாருக்கு எதிராக... தரக்குறைவான கருத்து... ட்விட்டரில் டிரெண்டாகும் #BoycottBBC
- Automobiles
ஒரே ஆண்டில் க்ரெட்டாவின் விற்பனையில் இவ்வளவு பெரிய மாற்றமா!! ஹூண்டாயின் விற்பனை 26% அதிகரிப்பு!!
- Finance
1 பில்லியன் டாலர் ஐபிஓ.. மாபெரும் திட்டத்துடன் களமிறங்கும் சோமேட்டோ..!
- Sports
இந்த விஷயங்களை செய்தால் போதும்... பல்வேறு சாதனைகளை படைக்கலாம்.நாளை கோலிக்கு காத்திருக்கும் வாய்ப்பு
- Lifestyle
மகா சிவராத்திரி அன்னைக்கு நீங்க நினைச்சது நடக்க இந்த விஷயங்கள மட்டும் செய்யுங்க...!
- Education
ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசின் NTPC நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
'லாபம்' கடைசிக்கட்ட படப்பிடிப்பு... ரெடியாகிறார் 'புரட்சி விவசாயி' விஜய் சேதுபதி..சென்னை அருகே செட்!
சென்னை: விஜய் சேதுபதி நடிக்கும் 'லாபம்' படத்தின் கடைசிக்கட்ட படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது என்று அதன் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் சொன்னார்.
தமிழில், தேசிய விருது பெற்ற இயற்கை, ஈ, பேராண்மை, புறம்போக்கு ஆகிய படங்களை இயக்கியவர் எஸ்.பி.ஜனநாதன். இவர் இப்போது இயக்கி வரும் படம், 'லாபம்'.
இதில் விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன், சாய் தன்ஷிகா, ஜெகபதிபாபு, கலையரசன், ஹரீஷ் உத்தமன் உட்பட பலர் நடிக்கின்றனர்.
தெலுங்குக்கு போகிறது சிவகார்த்திகேயனின் ஹீரோ... அங்க என்ன டைட்டில் வச்சிருக்காங்க பாருங்க!

துப்பாக்கி போலீஸ்
ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். டி.இமான் இசை அமைக்கிறார். இதன், பர்ஸ்ட்லுக் போஸ்டர் சென்னையில் நடந்த விழா சமீபத்தில் வெளியிடப்பட்டது. அந்த போஸ்டரில், ஏர்கலப்பை, குழந்தையுடன் போராடும் பெண், ஆவேசமாக கோஷம் போடும் இளம் பெண், கையில் துப்பாக்கியுடன் குறிபார்க்கும் போலீஸ், இவர்களுக்கு நடுவில் ஒரு கையில் மைக்கும் ஒரு தோளில் ஒலிப்பெருக்கியுமாகக் குரல் எழுப்பிக் கொண்டிருக்கிறார் விஜய் சேதுபதி.

மக்கள் போராட்டம்
மேலே 'குடிமக்களே...' என்று அவர் அழைப்பது போல ஓர் வாசகம் ஆகியவை அந்த போஸ்டரில் இடம்பெற்றுள்ளது. இந்த போஸ்டர் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. விவசாயத்தையும் விவசாயிகளின் நிலை பற்றியும் பேசும் இந்தப் படத்தின் போஸ்டர் பற்றி இயக்குனர் எஸ்.பி ஜனநாதனிடம் கேட்டபோது, உலகம் முழுவதும் அரச பயங்கரவாதத்துக்கு எதிராக மக்கள் போராடியதைதான் காண்பிக்கிறது என்றார்.

காட்சி வடிவம்
மேலும் அவர் கூறும்போது, மக்கள் குண்டடிப்பட்டு செத்துதான் அந்த பலனை நாம் அனுபவத்துக் கொண்டிருக்கிறோம். அதைத்தான் இந்த சிலைகள் உணர்த்துகின்றன' என்று கூறியிருந்தார். போஸ்டரில் இடம்பெற்றுள்ள சிலைகள் படத்திலும் அப்படியே இடம்பெறுகின்றன. அதை, வடிவமைத்தவர், பிரபல ஓவியர் சந்துரு. முக்கியமான ஓவியர். சினிமாவுக்காக அவர் வடிவமைத்த ஒரே காட்சி வடிவம் இது என்று படக்குழு தெரிவித்திருந்தது.

கடைசிக்கட்ட படப்பிடிப்பு
இந்நிலையில் இதன் கடைசிக்கட்ட படப்பிடிப்பு அடுத்த மாதம், சென்னையில் தொடங்குகிறது. தொடர்ந்து சுமார் 25 நாட்கள் படப்பிடிப்பு நடக்கிறது. அதோடு படம் முடிகிறது. சென்னையில் சில இடங்களிலும் குன்றத்தூரில் செட் அமைத்தும் ஷூட்டிங் நடக்க இருக்கிறது. அதற்கான வேலைகளில் படக்குழு ஈடுபட்டுள்ளது. இந்தப் படத்தை விஜய் சேதுபதி தயாரிக்கிறார்.