Don't Miss!
- News பிளான் பண்ணியே வேட்பு மனுவில் தவறு செய்துள்ளார் அண்ணாமலை.. பெரிய திட்டம்.. விளாசும் காங்கிரஸ்!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Lifestyle 1 1/2 கப் கோதுமை மாவும், 2 உருளைக்கிழங்கும் இருந்தா ஈவ்னிங் இப்படி ட்ரை பண்ணுங்க.. டேஸ்டியா இருக்கும்..
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Automobiles இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
'லாபம்' கடைசிக்கட்ட படப்பிடிப்பு... ரெடியாகிறார் 'புரட்சி விவசாயி' விஜய் சேதுபதி..சென்னை அருகே செட்!
சென்னை: விஜய் சேதுபதி நடிக்கும் 'லாபம்' படத்தின் கடைசிக்கட்ட படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது என்று அதன் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் சொன்னார்.
தமிழில், தேசிய விருது பெற்ற இயற்கை, ஈ, பேராண்மை, புறம்போக்கு ஆகிய படங்களை இயக்கியவர் எஸ்.பி.ஜனநாதன். இவர் இப்போது இயக்கி வரும் படம், 'லாபம்'.
இதில் விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன், சாய் தன்ஷிகா, ஜெகபதிபாபு, கலையரசன், ஹரீஷ் உத்தமன் உட்பட பலர் நடிக்கின்றனர்.
தெலுங்குக்கு போகிறது சிவகார்த்திகேயனின் ஹீரோ... அங்க என்ன டைட்டில் வச்சிருக்காங்க பாருங்க!
துப்பாக்கி போலீஸ்
ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். டி.இமான் இசை அமைக்கிறார். இதன், பர்ஸ்ட்லுக் போஸ்டர் சென்னையில் நடந்த விழா சமீபத்தில் வெளியிடப்பட்டது. அந்த போஸ்டரில், ஏர்கலப்பை, குழந்தையுடன் போராடும் பெண், ஆவேசமாக கோஷம் போடும் இளம் பெண், கையில் துப்பாக்கியுடன் குறிபார்க்கும் போலீஸ், இவர்களுக்கு நடுவில் ஒரு கையில் மைக்கும் ஒரு தோளில் ஒலிப்பெருக்கியுமாகக் குரல் எழுப்பிக் கொண்டிருக்கிறார் விஜய் சேதுபதி.
மக்கள் போராட்டம்
மேலே 'குடிமக்களே...' என்று அவர் அழைப்பது போல ஓர் வாசகம் ஆகியவை அந்த போஸ்டரில் இடம்பெற்றுள்ளது. இந்த போஸ்டர் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. விவசாயத்தையும் விவசாயிகளின் நிலை பற்றியும் பேசும் இந்தப் படத்தின் போஸ்டர் பற்றி இயக்குனர் எஸ்.பி ஜனநாதனிடம் கேட்டபோது, உலகம் முழுவதும் அரச பயங்கரவாதத்துக்கு எதிராக மக்கள் போராடியதைதான் காண்பிக்கிறது என்றார்.
காட்சி வடிவம்
மேலும் அவர் கூறும்போது, மக்கள் குண்டடிப்பட்டு செத்துதான் அந்த பலனை நாம் அனுபவத்துக் கொண்டிருக்கிறோம். அதைத்தான் இந்த சிலைகள் உணர்த்துகின்றன' என்று கூறியிருந்தார். போஸ்டரில் இடம்பெற்றுள்ள சிலைகள் படத்திலும் அப்படியே இடம்பெறுகின்றன. அதை, வடிவமைத்தவர், பிரபல ஓவியர் சந்துரு. முக்கியமான ஓவியர். சினிமாவுக்காக அவர் வடிவமைத்த ஒரே காட்சி வடிவம் இது என்று படக்குழு தெரிவித்திருந்தது.
கடைசிக்கட்ட படப்பிடிப்பு
இந்நிலையில் இதன் கடைசிக்கட்ட படப்பிடிப்பு அடுத்த மாதம், சென்னையில் தொடங்குகிறது. தொடர்ந்து சுமார் 25 நாட்கள் படப்பிடிப்பு நடக்கிறது. அதோடு படம் முடிகிறது. சென்னையில் சில இடங்களிலும் குன்றத்தூரில் செட் அமைத்தும் ஷூட்டிங் நடக்க இருக்கிறது. அதற்கான வேலைகளில் படக்குழு ஈடுபட்டுள்ளது. இந்தப் படத்தை விஜய் சேதுபதி தயாரிக்கிறார்.