Don't Miss!
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Automobiles பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- News நான் கேட்டது ‘அவள்’.. கடவுள் கொடுத்தது ‘அவல்’.. சரி சாப்டுட்டு வேற வேலையை பார்ப்போம்!
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 வயது சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
அடக்கடவுளே.. இதுக்காகத் தான் விஜய்சேதுபதியும், அவர் மகனும் அடிச்சிக்கிட்டாங்களா?
விஜய்சேதுபதி நடிக்கும் சிந்துபாத் படத்தின் கதை பற்றி தெரியவந்துள்ளது.
Recommended Video
சென்னை: விஜய் சேதுபதி நடிக்கும் சிந்துபாத் படத்தில் அவரது கதாபாத்திரம் என்ன, படத்தின் கதை என்ன என்பது தெரியவந்துள்ளது.
பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி ஆகிய இரண்டு படங்களை தொடர்ந்து, எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் மூன்றாவது படம் சிந்துபாத். இந்த படத்தை கே புரோடக்ஷன்ஸ் சார்பில் ராஜராஜன் மற்றும் வான்சன் மூவிஸ் ஷான் சுதர்ஷன் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.
இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார். விஜய் சேதுபதியின் மகன் சூர்யா, இப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிறார்.
ஒரு எளிய மனிதன் ஒரு எளிய வாழ்வை வாழ இந்த சமூகம் எவ்வளவு பெரிய தடையாக உள்ளது என்பதையும், அதற்கு தீர்க்கமான தீர்வையும் பேசும் படமாக சிந்துபாத் உருவாகியுள்ளது.
உடைக்கு பதிலாக கொசு வலையை அணிந்திருக்கிறீர்களே: நடிகையை விளாசிய ரசிகர்கள்
திருடர்கள்:
சிந்துபாத் படத்தில் விஜய் சேதுபதியும், அவரது மகன் சூர்யாவும் தென்காசி பகுதியில் சின்ன சின்ன திருட்டு வேலைகள் செய்யும் திருடர்களாக நடித்துள்ளனர். படம் முழுவதும் வரும் கதாபாத்திரத்தில் சூர்யா நடித்துள்ளார். எனவே இது அவருக்கு நல்ல அறிமுக படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறுது.
அஞ்சலி கேரக்டர்:
இந்த படத்தில் அஞ்சலியின் கதாபாத்திரம் மிகவும் வலிமை வாய்ந்தது எனக் கூறப்படுகிறது. எனவே இப்படத்தில் அஞ்சலியின் நடிப்பு பெரிதும் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அஞ்சலிக்கும் விஜய் சேதுபதிக்குமான காதல் காட்சிகள் மிக சுவாரஸ்யமாக அமைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
வில்லன் லிங்கா:
சேதுபதி படத்தில் உதவி ஆய்வாளராக நடித்த லிங்கா, இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இதற்காக அவர் தாய்லாந்து சென்று, கடந்த ஒரு வருடமாக கஷ்டப்பட்டு 18 கிலோ எடை கூட்டியுள்ளார். விவேக் பிரசன்னா, இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நகைச்சுவை பொறுப்பை ஜார்ஜ் ஏற்றுள்ளார்.
வெளிநாட்டில் படப்பிடிப்பு:
தென்காசி, மலேசியா, தாய்லாந்து என மூன்று இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது. படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரோடக்ஷ்ன் வேலைகள் நடைபெற்று வருகின்றன. மலேசியா, தாய்லாந்தில் எடுக்கப்பட்ட காட்சிகளின் டப்பிங் வேலைகளுக்காக, இயக்குனர் அந்நாடுகளுக்கு சென்றுள்ளார்.
கோடை ரிலீஸ்:
விரைவில் போஸ்ட் புரொடக்சன் பணிகள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து வேலைகளையும் விறுவிறுப்பாக செயல்பட்டு முடித்து, வரும் கோடை விடுமுறையில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.