Don't Miss!
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு ஆப்பு வைத்த சிஎஸ்கே வீரர்.. டி20 உலககோப்பையில் சேர்க்க ரெய்னா கோரிக்கை
- News விவிபேட் ஒப்புகை சீட்டுகளை எண்ணக்கோரிய வழக்கு: இன்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கிறது உச்ச நீதிமன்றம்
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Finance ரிலையன்ஸ் ஜியோ மூத்த அதிகாரி திடீர் ராஜினாமா..!!
- Automobiles ஓலா, ஏத்தர் எல்லாம் ஓரமா போ! ஆம்பியர் நிறுவனத்தின் புதிய இவி 30ம் தேதி வருது!
- Lifestyle குரு பார்வை இருந்தால் திருமணம் நடந்துவிடுமா? ஜோதிடம் சொல்வது என்ன?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
கொரோனா எதிரொலி.. ஓடிடியில் ரிலீஸ் ஆகும் விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார்?
சென்னை: கொரோனா எதிரொலி காரணமாக விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார் படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா பரவல் நாடு முழுவதும் தீவிரமாக உள்ளது. நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
மோஷன் போஸ்டரே மிரட்டலா இருக்கே.. வெளியானது அரண்மணை 3 ஃபர்ஸ்ட் லுக்!
கொரோனா பாதிப்பால் உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
ஞாயிறுகளில் முழு ஊரடங்கு
அதன்படி தமிழகத்தில் வார நாட்களில் இரவு நேர ஊரடங்கும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் பூங்காக்கள், வணிக வளாகங்கள் மற்றும் திரையரங்குகளில் 50 சதவீத மக்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தயாரிப்பாளர்கள் யோசனை
இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு மற்றும் திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி என்பதால் திரைத்துறை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் படங்களை ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர்கள் யோசித்து வருகின்றனர்.
இரவு காட்சிகள் ரத்து
ஊரடங்கு காரணமாக திரையரங்குகளில் தினமும் இரவுக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மக்கள் கூட்டம் அதிகம் வரும் நாட்களான ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
பல படங்கள் தள்ளிவைப்பு
இந்த சூழ்நிலையில் படங்களை ஓடிடியில் ரிலீஸ் செய்தால் பெரும் நஷ்டம் ஏற்படும் என்று திரையரங்க உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதனால் எம்ஜிஆர் மகன், தலைவி, டாக்டர் உள்ளிட்ட படங்களின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
துக்ளக் தர்பார்
இந்நிலையில் ஊரடங்கு காரணமாக தயாரிப்பாளர்கள் மீண்டும் ஓடிடி தளங்கள் பக்கம் திரும்பி உள்ளனர். அந்தவகையில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி உள்ள 'துக்ளக் தர்பார்' திரைப்படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.