twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மிஷ்கின் இயக்கத்தில் விஜய்சேதுபதி...பிசாசு பற்றிக்கொண்ட கதை

    |

    சென்னை : தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், முருகானந்தம் ராக்போர்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'பிசாசு-2'.

    இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. 'பிசாசு-2' படத்தில் விஜய் சேதுபதி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    விஜய் சேதுபதி படங்கள் வரிசை கட்டி ஒவ்வொன்றாக ரீலீஸ் ஆன வண்ணம் உள்ளது . இதற்க்கு நடுவே மிஷ்கின் படம் என்றதும் பலரது மனதில் ஆச்சிரயம் . மிஷ்கின் பற்றி தான் சிந்தித்த விஷயங்களும் சந்தித்த விஷயங்களும் நிறயவே பகிர்ந்து உள்ளார் .

    மீண்டும் மீண்டும் படையெடுக்கும் மீரா மிதுன்.. ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை ஹைகோர்ட்! மீண்டும் மீண்டும் படையெடுக்கும் மீரா மிதுன்.. ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை ஹைகோர்ட்!

     டிராவல் பண்ண முடியும்

    டிராவல் பண்ண முடியும்

    இயக்குனர் மிஷ்கினின் கலை ஆர்வம் குறித்தும், விஜய் சேதுபதி எவ்வாறு இப்படத்தில் இணைந்தார் என்பது குறித்த ருசிகர தகவல்களை பகிர்ந்துள்ளார். மிஷ்கின் பல நேர்காணல்களில் சொல்லி இருப்பார், குரோசோவோவுடன் பத்து வருடம் டிராவல் பண்ணினேன் என்று இவர் குரோசோவோ படம் தானே பார்த்திருப்பார். எப்படி டிராவல் பண்ண முடியும் என்று எண்ணும்போது திருவள்ளுவர் இப்போது இல்லை. ஆனால் குறள் வழியாக நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார். அதைப் போன்ற உறவுதான் குரோசோவோ-மிஷ்கின் உறவு .

    பிரம்மித்து போனேன்

    பிரம்மித்து போனேன்

    அதை நான் அவரை சந்தித்த பிறகு சைக்கோ படம் பார்த்த பிறகு அவர் குரோசோவாவுடன் எவ்வாறு பயணப்பட்டு இருப்பார் என்பதை நான் உணர்ந்தேன். உண்மையிலே 'சைக்கோ படம் பார்த்து பிரம்மித்து போனேன் . படம் மிகவும் பிடித்திருந்தது. ஒவ்வொரு ஷாட்டும் கதை சொன்னது. ஒரு நாள் இயக்குநர் மிஷ்கினை தொடர்பு கொண்டு பாராட்டு தெரிவித்தேன். அப்போது சந்திக்கலாமா என்றதும் 'வா கண்ணம்மா' என்று அழைத்தார்.

    மீட்டிங் சிறப்பாக முடிந்தது.

    மீட்டிங் சிறப்பாக முடிந்தது.

    'பிசாசு-2' கதையை சுருக்கமாக சொன்னார். ஒவ்வொரு கேரக்டரையும் எப்படி உருவாக்கி வைத்திருக்கிறார் என்பதை சொல்லும்போது சினிமா கலைஞனாக பெருமிதம் அடைந்தேன். நாம் இருவரும் சேர்ந்து படம் பண்ணுவோம். அதுவும் சீக்கரமாக பண்ணுவோம் என்றேன், எனவே பிசாசு 2 படத்தில் எனக்காக ஒரு பிரத்யேகமாக சிறிய கதாபாத்திரத்தை உருவாக்கியுள்ளார். உங்கள் சிந்தனையில் நான் படம் பண்ணனும். நான் ரெடியாக இருக்கிறேன்.உங்களுடன் படம் பண்ணம்போது சினிமாவை மேலும் கற்றுக்கொள்ள முடியும்' என்று விஜய சேதுபதி மிஷ்கின் பற்றியும் அவரை சந்தித்ததை பற்றியும் தெரிவித்து உள்ளார்.

    ஒப்புக்கொண்ட காரணத்தினால்

    ஒப்புக்கொண்ட காரணத்தினால்

    மிக விரைவில் மிஷ்கின் இயக்கத்தில் ஒரு மாறுபட்ட கதையில் விஜய் சேதுபதி நடிக்க வாய்ப்பு உள்ளது என்று நிறைய மீடியா வட்டங்கள் பேச துவங்கி விட்டன . அதிகமான படங்கள் ஒப்புக்கொண்ட காரணத்தினால் டேட்ஸ் பிரச்சனை வராமல் இருவரும் பக்காவாக பிளான் செய்து விரைவில் ஷூட்டிங் செல்ல திட்டங்கள் தீட்ட படுகிறது .

    English summary
    vijay sethupathi shared his experience in pisasu 2 with myskkin. and he shared that how to he joined in pisasu 2 and myskkin's talent in his recent interview.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X