Don't Miss!
- News திருப்பியடித்த இஸ்ரேல்.. தெற்கு லபனானில் ஹிஸ்புல்லா மீது டிரோன் தாக்குதல்.. 2 பேர் பலி.. ஹை டென்ஷன்
- Sports முத்துப்பாண்டிய அவன் கோட்டைலயே அடிச்சிட்டாங்க.. சிஎஸ்கேவை பொளக்கும் ரசிகர்கள்.. வெறித்தன மீம்ஸ்!
- Finance புதிய EV கொள்கை.. சீனாவுக்கு மட்டும் செக்..!
- Lifestyle ஒருடைம் உருளைக்கிழங்கு குருமாவை இந்த ஸ்டைலில் செய்யுங்க.. அப்புறம் பாருங்க இப்படிதான் எப்பவும் செய்வீங்க..
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
பட வாய்ப்புக்காக பாலியல் தொல்லையை சந்தித்த நடிகைகள்: விஜய் சேதுபதி என்ன சொல்கிறார்?
சென்னை: பெண்களுக்கு பாலியல் தொல்லை அளிக்கும் ஆண்களை பார்த்தாலே அருவருப்பாக உள்ளது என நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.
திரைத்துறையில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது குறித்து நடிகைகள் தானாக முன்வந்து பேசத் துவங்கியுள்ளனர். தற்போது தான் ஒவ்வொரு நடிகையாக தங்களுக்கு நேர்ந்த கொடுமைகள் பற்றி துணிந்து பேசுகிறார்கள்.
இந்நிலையில் பாலியல் தொல்லைகள் குறித்து நடிகர் விஜய் சேதுபதி கூறியிருப்பதாவது,
நடிகைகள்
பாலியல் தொல்லைகள் குறித்து நடிகைகள் பேசியுள்ளனர். அது அவர்களின் சொந்த கருத்து. எங்கு சென்றாலும் பெண்கள் பாலியல் தொல்லைகளை சந்திக்கிறார்கள்.
சிறுமிகள்
பெண்கள் மட்டும் அல்ல சிறுமிகள் கூட பாலியல் தொல்லைக்கு ஆளாகிறார்கள். அம்மா என்கிற பெண் இல்லை என்றால் நாம் பிறந்திருக்க முடியுமா?
பெண்கள்
பெண்கள் முக்கியமானவர்கள் என்பதை உணர்ந்து ஆண்கள் அவர்களை மதிக்க வேண்டும். எதையும் கட்டாயப்படுத்தி செய்ய வைக்க முடியாது. அவர்களாக புரிந்து கொள்ள வேண்டும்.
அருவருப்பு
பெண்களுக்கு பாலியல் தொல்லை அளிக்க வேண்டும் என்று நினைக்கும் ஆண்களை பார்த்தால் அருவருப்பாக உள்ளது என்று விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.