காயத்ரியுடன் மூன்றாவது முறை ஜோடி சேரும் விஜய் சேதுபதி!
நடிகை காயத்ரியுடன் அடுத்தடுத்து ஜோடி சேர்ந்து, புதிய கிசுகிசுகளுக்கு வழி அமைத்துக் கொடுத்திருக்கிறார் முன்னணி ஹீரோ விஜய் சேதுபதி.
விஜய் சேதுபதி இப்போது மெல்லிசை எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை புதுமுக இயக்குனர் ரஞ்சித் இயக்குகிறார். கடந்த டிசம்பர் 17ம் தேதி இப்படத்திற்கான பூஜை நடைபெற்றது. படத்தில் மொத்தம் இரண்டு நாயகிகள். அதில் ஒருவர் காயத்ரி.
இவர், ஏற்கெனவே நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், அடுத்து வரவிருக்கும் ரம்மி ஆகிய படங்களில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.

தற்போது மூன்றாவது முறையாக விஜய் சேதுபதி-காயத்ரி மெல்லிசை படத்தில் இணைகிறார்கள். 'பீட்சா' படத்தைப் போன்றே 'மெல்லிசை' படமும் ஒரு திரில்லர் படமாக உருவாகி வருகிறது.
இதுகுறித்து விஜய் சேதுபதியிடம் கேட்டபோது, "உண்மைதான். காயத்ரி இந்தப் படத்தில் எனக்கு ஜோடியாக நடிக்கிறார். அவருடன் நான் தொடர்ந்து நடிக்க தனிப்பட்ட காரணம் எதுவும் இல்லை. திறமையான நடிகை என இயக்குநர்கள் நம்பி ஒப்பந்தம் செய்கிறார்கள்," என்றார்.


Click it and Unblock the Notifications











