Don't Miss!
- Automobiles ஹோண்டா தயாரித்த எலெக்ட்ரிக் காரா இது! பெரிய பெரிய சூப்பர் கார் பிராண்டுகளே இதோட ஸ்டைலுக்கு முன்னாடி மண்டியிடனு
- Technology EPFO முக்கிய அறிவிப்பு.. PF கணக்கு இருக்கா? அப்போ உடனே இதை பண்ணனும்.. வந்தது புது அப்டேட் உத்தரவு..
- News லோக்சபா தேர்தல் முடிவுகளில் இழுபறி ஏற்பட்டால் யாருக்கு ஆதரவு? எடப்பாடி பழனிசாமி பரபர திட்டம்!
- Education தமிழக அரசு கல்லூரிகளில் வேலை செய்ய அரிய வாய்ப்பு...!!
- Finance ஆதார் கார்டு மோசடி.. சிக்குனா "சிக்கன்" ஆகிடுவீங்க!
- Lifestyle ராம நவமி 2024 ஏன் கொண்டாடப்படுகிறது? இதன் சிறப்பு என்ன தெரியுமா?
- Sports IPL 2024 : ஐபிஎல் தொடரில் எந்த ஆல் - ரவுண்டரும் செய்யாத சாதனையை செய்த சுனில் நரைன்
- Travel தமிழ்நாட்டுக்கு உள்ளேயும், பக்கத்துலயும் இவ்வளோ அழகான பெரிய நீர்வீழ்ச்சிகள் இருக்கு தெரியுமா?
Exclusive: என்னா மனுசன்ங்க அவரு.. நான் திரும்ப படங்களில் நடிக்க விஜய்சேதுபதி தான் காரணம்: கஸ்தூரி
தனது தோற்றத்தை வைத்து தான் கதாபாத்திரத்தை இயக்குனர்கள் முடிவு செய்கிறார்கள் என நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: திரைப்படங்களில் தான் மீண்டும் நடிப்பதற்கு, நடிகர் விஜய் சேதுபதி தான் காரணம் என நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.
சலங்கை துரை இயக்கத்தில் போலீஸ் அதிகாரியாக கஸ்தூரி நடிக்கும் படம் "இ.பி.கோ 302". இப்படத்தை செளத் இந்தியா புரொடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்கிறது.
"இ.பி.கோ 302" திரைப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது. இதையொட்டி பட புரோமோஷன் வேலைகளில் பிஸியாக இருந்த நடிகை கஸ்தூரியை சந்தித்தேன்.
அவருடன் உரையாடியதில் இருந்து...
கார்த்தி பட நடிகை திருமணம் ஆகாமல் கர்ப்பம்: அறிவிப்பு வெளியிட்ட நடிகர்
போலீஸ் வேடம்:
"போலீஸ் அதிகாரியாக நடிக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை. அது இந்த படத்தின் மூலம் நிறைவேறியுள்ளது. படத்தில் எனக்கு ஆக்ஷன் காட்சிகள் இருக்கின்றன. சாமி, சிங்கம் போல மாஸ் போலீஸ் படமாகத்தான் இருக்கும். நிஜ வாழ்க்கையில் நம் கிரண்பேடி போன்ற ஒரு ரோல்.
மென்மையான கதாபாத்திரங்கள்:
எனது தோற்றத்தை வைத்து தான் எனது கதாபாத்திரத்தை இயக்குனர்கள் முடிவு செய்கிறார்கள். அதனால் தான் நான் காதலியாக, மனைவியாக, தங்கையாக என மென்மையான கதாபாத்திரங்களில் நடித்து வந்தேன். இந்த படத்திற்கு பிறகு போலீஸ் அதிகாரி ரோலுக்கும் என்னை அழைப்பார்கள் என நினைக்கிறேன்.
விஜய் சேதுபதி தான் காரணம்:
படங்களில் நான் மீண்டும் நடிப்பதற்கு விஜய் சேதுபதி தான் காரணம். அவர் ஹீரோவாகவும் நடிக்கிறார். வில்லனாகவும் நடிக்கிறார். பெண்ணாகவும் நடிக்கிறார், திருநங்கையாகவும் நடிக்கிறார். இப்போது அவர் தான் என் இன்ஸ்பிரேஷன். அவரை போல் தான் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன்.
பாசாங்கு:
சினிமாவில் போலியாக பாசாங்கு செய்து கொண்டு காட்டுவதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன். அதை நான் பேசினால் என்னைத் திட்டுவார்கள். ஆனால் சிலர் எனக்கு போன் செய்து பாராட்டுவார்கள்" இவ்வாறு அவர் கூறினார்.