புலி படத்தில் விஜய்- ஸ்ருதி சொந்தக் குரலில் பாட்டு!
தமிழ் சினிமாவில் சொந்தக் குரலில் பாடும் நடிகர் - நடிகைகளுக்குப் பஞ்சமில்லை. விஜய்யும் ஸ்ருதிஹாஸனும் அவ்வப்பது சொந்தக் குரலில் பாடி வருபவர்கள்.
இப்போது இருவரும் முதல் முறையாக ஜோடி சேரும் புலி படத்தில் இருவருமே ஒரு பாடலை சொந்தக் குரலில் பாடப் போகிறார்களாம்.

சிம்புதேவன் இயக்கும் இந்தப் படத்தில் ஹன்சிகா இன்னொரு நாயகியாக நடிக்கிறார். முக்கிய வேடங்களில் ஸ்ரீதேவி, சுதீப் ஆகியோர் நடித்துள்ளனர்.
தேவிஸ்ரீபிரசாத் இசையில் இப்படத்தில் 6 பாடல்கள் இடம் பெறுகின்றன. இதில் மூன்று பாடல்களுக்கு இசையமைத்துவிட்டார். அதில் ஒரு பாடலுக்காக ஈசிஆரில் பிம்மாண்டமாக செட் அமைத்து படமாக்கியுள்ளனர். இன்னும் மூன்று பாடல்களுக்கு இசையமைக்கவுள்ளார் தேவிஸ்ரீபிரசாத். இந்த மூன்று பாடல்களில் ஒரு பாடலுக்கு விஜய்-சுருதியை பாட வைக்க முடிவு செய்திருக்கிறாராம்.
Comments


Click it and Unblock the Notifications