Don't Miss!
- Finance வெயிலுக்கு ஏத்த பிஸ்னஸ்.. சும்மா சொல்லக்கூடாது முகேஷ் அம்பானி வேற லெவல்..! .
- News "உயர் ஜாதியினரிடம்" 41% ஆனால்.. முஸ்லிம்களிடம் 8% சொத்துக்கள்தான் உள்ளன: டேட்டா சொல்லும் உண்மை
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Lifestyle ஹிட்லரின் நாஜி முகாமில் நடத்தப்பட்ட திகிலூட்டும் சோதனைகள் என்னென்ன தெரியுமா? முக்கியமா இரட்டை குழந்தைகள் மீது!
- Automobiles சாதாரணமா பஸ்ஸில் பயணம் செய்தது இவ்ளோ பெரிய ஆளா... முகத்தை நல்லா உத்து பார்த்ததும் ஷாக் ஆன மக்கள்...
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
டிவிட்டரில் இணைந்தார்களா விஜய்யின் மகனும் மகளும்? பரபரப்பு விளக்கம்!
சென்னை: நடிகர் விஜய்யின் மகன் மற்றும் மகள் பெயரில் வலம் வரும் டிவிட்டர் கணக்குகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் விஜய். தமிழ் மட்டுமின்றி மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி பேசும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ளார்.
விஜய் நடிப்பில் கடைசியாக மாஸ்டர் திரைப்படம் வெளியானது. இந்நிலையில் நடிகர் விஜய் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார்.
பாடல் காட்சிகள்
இந்தப் படத்தின் முதல் ஷெட்யூல் ஜார்ஜியாவில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து சென்னையில் பாடல் காட்சிகள் படமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
ஜேசன் விஜய்
ஆனால் கொரோனா இரண்டாவது அலை உச்சத்தில் இருந்ததால் படப்பிடிப்பை தொடர முடியாமல் போனது. இந்நிலையில் நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் டிவிட்டரில் இணைந்ததாக டிவிட்டர் கணக்கு ஒன்று வலம் வருகிறது.
திவ்யா சாஷா
இதனை பார்த்த விஜய் ரசிகர்கள் ஜேசன் விஜய்யின் டிவிட்டர் கணக்கை பின்தொடர தொடங்கி விட்டனர். ஏற்கனவே விஜய்யின் மகள் திவ்யா சாஷா டிவிட்டரில் இணைந்ததாகவும் பிரபல நடிகரிகன் பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்லி பதிவிட்டதாகவும் டிவிட் ஒன்று வைரலானது.
போலியானவை..
இந்நிலையில் ஜேசன் விஜய் மற்றும் திவ்யா சாஷா ஆகியோரின் பெயரில் வலம் வரும் டிவிட்டர் கணக்கு குறித்து விஜய் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது அவர்கள் இருவர் பெயரிலும் உள்ள டிவிட்டர் கணக்குகள் போலியானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலி கணக்குகள் அதிகம்
மேலும் டிவிட்டர் மட்டுமின்றி வேறு எந்த சோஷியல் மீடியாவிலும் அவர்கள் இருவருக்கும் கணக்கு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரபலங்களின் பெயர்களில் போலி கணக்குகள் தொடங்கப்படுவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது.
Recommended Video
மயில்சாமி விளக்கம்
நடிகர்கள் மயில்சாமி, சார்லி மற்றும் செந்தில் ஆகியோரின் பெயர்களில் டிவிட்டரில் போலி கணக்குகள் தொடங்கப்பட்டு தகவல்கள் பகிரப்பட்டன. அதில் மயில்சாமி தனக்கு எந்த சோஷியல் மீடியாவிலும் கணக்கு இல்லை என விளக்கம் அளித்தார்.
போலி கணக்கு முடக்கம்
அதனை தொடர்ந்து நடிகர் சார்லியும் தனது பெயரில் போலி டிவிட்டர் கணக்கு இருப்பதாக சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். புகார் அளித்த 30 நிமிடத்தில் போலி கணக்கு முடக்கப்பட்டது.
நிம்மதியோ போய்விட்டது
நேற்று முன்தினம் நடிகர் செந்தில் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் தனது பெயரில் உள்ள போலி கணக்கு குறித்து புகார் அளித்தார். போலி டிவிட்டர் கணக்கால் தனது நிம்மதியே போய்விட்டது என்றும் அவர் வேதனைப்பட்டது குறிப்பிடத்தக்கது.