Don't Miss!
- Finance சென்னை-க்கு ஓடி வந்த அம்பானி..! புதிய பிஸ்னஸ், சியோமி உடன் போட்டியா..?
- News மதம் Vs மக்கள் திட்டங்கள்: பாஜகவின் கடலோர கர்நாடகா கோட்டையின் 3 தொகுதிகளை வேட்டையாடுமா காங்கிரஸ்?
- Lifestyle கத்திரிக்காயை இந்த மாதிரி ஒருமுறை பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க...
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Automobiles சாதாரணமா பஸ்ஸில் பயணம் செய்தது இவ்ளோ பெரிய ஆளா... முகத்தை நல்லா உத்து பார்த்ததும் ஷாக் ஆன மக்கள்...
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
எம்ஜிஆர்.. கருணாநிதி.. விஜய் சொன்ன எடுத்துக்காட்டு.. அஜித் பற்றி ரகசிய பேச்சு.. கவனித்தீர்களா?!
Recommended Video
சென்னை: விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் இடையே இணையத்தில் நடக்கும் சண்டை குறித்து நடிகர் விஜய் கருத்து தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் நடித்துள்ள பிகில் படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது.
இதில் நடிகர் விஜய் பேசிய விஷயங்கள் பெரிய அளவில் வைரலானது. இது தொடர்பாக நிறைய விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது.
சுபஸ்ரீ மரணத்தால் கொந்தளித்த விஜய்.. ரசிகர்களுக்கு வைத்த வேண்டுகோள்.. களமிறங்கும் பெரும் படை!
விஜய் என்ன
இந்த நிலையில் விஜய் தனது பிரச்சனையில், என்னுடைய முதலாளி ரசிகர்கள் தான். உங்களுக்கு என்று ஒரு அடையாளத்தை உருவாக்கிக்கொள்ளுங்கள். நாம் விளையாடும் வாழ்க்கை கூட ஒரு கால்பந்து விளையாட்டுதான். நம்மை வளர விடாமல் தடுக்க சிலர் முயற்சி செய்வார்கள். நமக்கு எதிராக சிலர் குழி பறிக்க முயற்சி செய்வார்கள்.
கோல் எப்படி
நம்ம கூட இருக்கிறவனே சேம் சைடுல கோல் போடுவான், அதை எல்லாம் நாம் கடந்து வர வேண்டும்.காரில் செல்லும்போது கருணாநிதி பற்றி தவறாக பேசியவரை காரில் இருந்து இறக்கிவிட்டார் எம்.ஜி.ஆர்.. அந்த அளவிற்கு அவர்களுக்கு இடையில் நட்பு இருந்தது. நமக்கு எதிரியாக இருந்தாலும் மதிக்க வேண்டும்.
கூடாது
என்னுடைய போட்டோவை உடையுங்கள், போஸ்டரை கிழியுங்கள், எனக்கு எதிராக என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால் என் ரசிகர்கள் மீது கை வைக்காதீங்க. அதை பற்றி நினைத்து கூட பார்க்காதீர்கள், என்று நடிகர் விஜய் குறிப்பிட்டுள்ளார்.
பேச்சு
விஜயின் இந்த பேச்சு தொடர்ந்து நடக்கும் ரசிகர் சண்டைகளை குறி வைத்து பேசப்பட்டது என்று கூறுகிறார்கள். அதாவது விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் இப்போதெல்லாம் சமூக வலைத்தளங்களில் அதிகம் சண்டை போடுகிறார்கள். இதனால் இணையத்திற்கு வெளியேயும் அடிதடி சண்டை எல்லாம் நடந்து வருகிறது.
விஜய் சண்டை
இந்த சண்டையை தடுக்கும் பொருட்டு விஜய் இப்படி பேசி இருக்கிறார். என்னுடைய ரசிகர்களை தாக்க வேண்டாம் என்று விஜய் அதனால்தான் அப்படி சொன்னார். சமாதானத்தை விரும்பி அவர் அப்படி பேசினார் என்று கூறுகிறார்கள்.
என்ன எடுத்துக்காட்டு
இதனால்தான் எதிர் எதிர் துருவங்களாக இருந்த எம்ஜிஆர் மற்றும் கருணாநிதியை அவர் எடுத்துக்காட்டினார். அவர்கள் எதிர் எதிர் இடங்களில் இருந்தாலும் மரியாதையுடன் இருந்தனர். அதேபோல் நாமும் இருக்க வேண்டும் என்று விஜய் மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார் என்கிறார்கள்.