Don't Miss!
- Lifestyle உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. வருகிற ஏப்ரல் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
- Automobiles சுஸுகி வி-ஸ்டார்ம் 800டிஇ பைக் இந்தியாவில் அறிமுகம்! இந்த பைக்க வாங்குற காசுல 2 மாருதி ஆல்டோ காரை வாங்கிடலாம்!
- News மீண்டும் மீண்டுமா! அரவிந்த் கெஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்யக்கோரி டெல்லி ஹைகோர்ட்டில் மனுத்தாக்கல்
- Finance TATA Sons நிறுவனத்தில் ஒரேயொரு பங்கு வைத்திருக்கும் மர்ம நபர்? யார் இவர்?! JRD டாடா-வுடன் நெருக்கம்!
- Sports 4,4,6.. உங்க ஸ்பின்னெல்லாம் என்னிடம் எடுபடாது.. கேகேஆர் அணியின் அஸ்திவாரத்தை ஆட்டிய கேமரூன் க்ரீன்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
எம்ஜிஆர்.. கருணாநிதி.. விஜய் சொன்ன எடுத்துக்காட்டு.. அஜித் பற்றி ரகசிய பேச்சு.. கவனித்தீர்களா?!
Recommended Video
சென்னை: விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் இடையே இணையத்தில் நடக்கும் சண்டை குறித்து நடிகர் விஜய் கருத்து தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் நடித்துள்ள பிகில் படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது.
இதில் நடிகர் விஜய் பேசிய விஷயங்கள் பெரிய அளவில் வைரலானது. இது தொடர்பாக நிறைய விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது.
சுபஸ்ரீ மரணத்தால் கொந்தளித்த விஜய்.. ரசிகர்களுக்கு வைத்த வேண்டுகோள்.. களமிறங்கும் பெரும் படை!
விஜய் என்ன
இந்த நிலையில் விஜய் தனது பிரச்சனையில், என்னுடைய முதலாளி ரசிகர்கள் தான். உங்களுக்கு என்று ஒரு அடையாளத்தை உருவாக்கிக்கொள்ளுங்கள். நாம் விளையாடும் வாழ்க்கை கூட ஒரு கால்பந்து விளையாட்டுதான். நம்மை வளர விடாமல் தடுக்க சிலர் முயற்சி செய்வார்கள். நமக்கு எதிராக சிலர் குழி பறிக்க முயற்சி செய்வார்கள்.
கோல் எப்படி
நம்ம கூட இருக்கிறவனே சேம் சைடுல கோல் போடுவான், அதை எல்லாம் நாம் கடந்து வர வேண்டும்.காரில் செல்லும்போது கருணாநிதி பற்றி தவறாக பேசியவரை காரில் இருந்து இறக்கிவிட்டார் எம்.ஜி.ஆர்.. அந்த அளவிற்கு அவர்களுக்கு இடையில் நட்பு இருந்தது. நமக்கு எதிரியாக இருந்தாலும் மதிக்க வேண்டும்.
கூடாது
என்னுடைய போட்டோவை உடையுங்கள், போஸ்டரை கிழியுங்கள், எனக்கு எதிராக என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால் என் ரசிகர்கள் மீது கை வைக்காதீங்க. அதை பற்றி நினைத்து கூட பார்க்காதீர்கள், என்று நடிகர் விஜய் குறிப்பிட்டுள்ளார்.
பேச்சு
விஜயின் இந்த பேச்சு தொடர்ந்து நடக்கும் ரசிகர் சண்டைகளை குறி வைத்து பேசப்பட்டது என்று கூறுகிறார்கள். அதாவது விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் இப்போதெல்லாம் சமூக வலைத்தளங்களில் அதிகம் சண்டை போடுகிறார்கள். இதனால் இணையத்திற்கு வெளியேயும் அடிதடி சண்டை எல்லாம் நடந்து வருகிறது.
விஜய் சண்டை
இந்த சண்டையை தடுக்கும் பொருட்டு விஜய் இப்படி பேசி இருக்கிறார். என்னுடைய ரசிகர்களை தாக்க வேண்டாம் என்று விஜய் அதனால்தான் அப்படி சொன்னார். சமாதானத்தை விரும்பி அவர் அப்படி பேசினார் என்று கூறுகிறார்கள்.
என்ன எடுத்துக்காட்டு
இதனால்தான் எதிர் எதிர் துருவங்களாக இருந்த எம்ஜிஆர் மற்றும் கருணாநிதியை அவர் எடுத்துக்காட்டினார். அவர்கள் எதிர் எதிர் இடங்களில் இருந்தாலும் மரியாதையுடன் இருந்தனர். அதேபோல் நாமும் இருக்க வேண்டும் என்று விஜய் மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார் என்கிறார்கள்.