Don't Miss!
- News ‛‛குழந்தைகளை தண்டிக்க கூடாது’’.. NCPCR ரூல்ஸ்ஸை அமல்படுத்த பள்ளி கல்வித்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
- Automobiles இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- Lifestyle Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.12,498 போதும்.. 50MP செல்பி கேமரா.. OZO ஆடியோ.. அறிமுகமானது HMD போன்கள்.. எந்த மாடல்?
- Finance ஹார்லிக்ஸ் இனி ஹெல்த் ட்ரிங்க் இல்ல.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
விஜய்க்கும் சூர்யாவுக்கும் சண்டை என்பது உண்மையா?
இப்போதெல்லாம் விஜயும் சூர்யாவும் சேர்ந்து நடிப்பதில்லை, ஏன் சரி வர பேசிக்கொள்வதே இல்லை என்று கோலிவுட் வட்டாரத்தில் சில பேச்சுகளும் அடிபடுகிறது, அப்படி என்ன தான் நடந்தது.
சென்னை: இப்போதெல்லாம் விஜயும் சூர்யாவும் சேர்ந்து நடிப்பதில்லை, ஏன் சரி வர பேசிக்கொள்வதே இல்லை என்று கோலிவுட் வட்டாரத்தில் சில பேச்சுகளும் அடிபடுகிறது, அப்படி என்ன தான் நடந்தது.
ஆரம்ப காலகட்டத்தில் விஜயும் சூர்யாவும் நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவருக்குமே தெரியும். சூர்யாவின் முதல் படமே விஜயுடன் தான், அது மட்டும் அல்ல சூர்யாவும் விஜயும் கல்லூரியில் ஒன்றாக படித்த நண்பர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இப்போதெல்லாம் விஜயும் சூர்யாவும் சேர்ந்து நடிப்பதில்லை, ஏன் சரி வர பேசிக்கொள்வதே இல்லை என்று கோலிவுட் வட்டாரத்தில் பேச்சுகளும் அடிபடுகிறது.
சூர்யாவின் முதல் படத்தின் போது விஜய் கொஞ்சம் வளர்ந்து வந்த நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே நேருக்கு நேர் படத்தில் நடிக்கும் போது ஷூட்டிங் நடக்கும் இடத்தில விஜய் தனது கருத்துக்களை, இயக்குனரிடம் சொல்வாராம், அதே போல சூர்யாவிற்கு நிறைய ஐடியாவும் தருவாராம். சூர்யா அப்போது நடிப்பிற்கு புதிது என்பதால் பொதுவாக எதுவும் பேசாமல் தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருப்பாராம்.
சில நாட்கள் கழித்து இருவரும் இணைந்து மீண்டும் நடித்த படம் தான் பிரண்ட்ஸ். அந்த படத்தின் போது விஜய்யை விட சூர்யா பல இடத்தில் நன்றாக நடித்திருந்தாராம். படத்தின் முதல் கட்ட காட்சியை பார்த்தபோது அதில் சூர்யா, விஜய்யை விட நடிப்பில் அசத்தி இருந்ததால் அதனை தாங்க முடியாத விஜய்க்கு நெருக்கமான சிலர், அந்த படத்தில் எடிட்டிங் வேலையின் போது பல இடங்களில் சூர்யாவின் காட்சியை அகற்றி விட்டார்களாம்.
இதை பின்பு தெரிந்து கொண்ட சூர்யா இதை பற்றி எதுவும் கேட்கவில்லையாம். இந்த சம்பவத்திற்கு பின்பு சூர்யாவும் விஜயும் இணைந்து எந்த படமும் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் சிலர் கூறுகையில் சூர்யாவிற்கும் விஜய்க்கும் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை. இருவருமே வளந்துவிட்ட நடிகர்கள். அதனால் அவரவர் பாதையை நோக்கி செல்கின்றனர் என்று கூறுகின்றனர். இருந்தாலும் இருக்கலாம் யாருக்கு தெரியும்?