Don't Miss!
- News இது டூ மச்.. விஜய் யாருக்கு ஓட்டுப் போடுகிறார் என்று போட்டோ எடுத்த போலீஸ்காரர்! நடவடிக்கை பாயுமா?
- Technology புது ரூல்ஸ்.. அமலுக்கு வந்தது.. உடனே ஆதார்ல இதை பண்ணுங்க.. சேமிப்பு கணக்குல வெச்சாச்சு.. என்னென்ன மாறுது?
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Lifestyle World Liver Day 2024: இந்த பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. இல்லன்னா கல்லீரல் சீக்கிரம் செயலிழந்துவிடும்..
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- Finance விப்ரோ லாபத்தில் 8% வீழ்ச்சி.. ஷாக் கொடுத்த மார்ச் காலாண்டு முடிவுகள்..!!
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
விஜய்க்கும் சூர்யாவுக்கும் சண்டை என்பது உண்மையா?
இப்போதெல்லாம் விஜயும் சூர்யாவும் சேர்ந்து நடிப்பதில்லை, ஏன் சரி வர பேசிக்கொள்வதே இல்லை என்று கோலிவுட் வட்டாரத்தில் சில பேச்சுகளும் அடிபடுகிறது, அப்படி என்ன தான் நடந்தது.
சென்னை: இப்போதெல்லாம் விஜயும் சூர்யாவும் சேர்ந்து நடிப்பதில்லை, ஏன் சரி வர பேசிக்கொள்வதே இல்லை என்று கோலிவுட் வட்டாரத்தில் சில பேச்சுகளும் அடிபடுகிறது, அப்படி என்ன தான் நடந்தது.
ஆரம்ப காலகட்டத்தில் விஜயும் சூர்யாவும் நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவருக்குமே தெரியும். சூர்யாவின் முதல் படமே விஜயுடன் தான், அது மட்டும் அல்ல சூர்யாவும் விஜயும் கல்லூரியில் ஒன்றாக படித்த நண்பர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இப்போதெல்லாம் விஜயும் சூர்யாவும் சேர்ந்து நடிப்பதில்லை, ஏன் சரி வர பேசிக்கொள்வதே இல்லை என்று கோலிவுட் வட்டாரத்தில் பேச்சுகளும் அடிபடுகிறது.
சூர்யாவின் முதல் படத்தின் போது விஜய் கொஞ்சம் வளர்ந்து வந்த நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே நேருக்கு நேர் படத்தில் நடிக்கும் போது ஷூட்டிங் நடக்கும் இடத்தில விஜய் தனது கருத்துக்களை, இயக்குனரிடம் சொல்வாராம், அதே போல சூர்யாவிற்கு நிறைய ஐடியாவும் தருவாராம். சூர்யா அப்போது நடிப்பிற்கு புதிது என்பதால் பொதுவாக எதுவும் பேசாமல் தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருப்பாராம்.
சில நாட்கள் கழித்து இருவரும் இணைந்து மீண்டும் நடித்த படம் தான் பிரண்ட்ஸ். அந்த படத்தின் போது விஜய்யை விட சூர்யா பல இடத்தில் நன்றாக நடித்திருந்தாராம். படத்தின் முதல் கட்ட காட்சியை பார்த்தபோது அதில் சூர்யா, விஜய்யை விட நடிப்பில் அசத்தி இருந்ததால் அதனை தாங்க முடியாத விஜய்க்கு நெருக்கமான சிலர், அந்த படத்தில் எடிட்டிங் வேலையின் போது பல இடங்களில் சூர்யாவின் காட்சியை அகற்றி விட்டார்களாம்.
இதை பின்பு தெரிந்து கொண்ட சூர்யா இதை பற்றி எதுவும் கேட்கவில்லையாம். இந்த சம்பவத்திற்கு பின்பு சூர்யாவும் விஜயும் இணைந்து எந்த படமும் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் சிலர் கூறுகையில் சூர்யாவிற்கும் விஜய்க்கும் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை. இருவருமே வளந்துவிட்ட நடிகர்கள். அதனால் அவரவர் பாதையை நோக்கி செல்கின்றனர் என்று கூறுகின்றனர். இருந்தாலும் இருக்கலாம் யாருக்கு தெரியும்?