Don't Miss!
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Finance ஆக்சிஸ் வங்கி சிஇஓ-க்கு அடித்தது யோகம்.. அடுத்த 3 வருடத்திற்கு ராஜ வாழ்க்கை..!
- News ஒரே காரில் 4 ஆண்களுடன் இளம்பெண் பயணம்.. குமரி போலீஸ் கேட்ட கேள்வி.. கேரள இளைஞர்கள் கடும் வாக்குவாதம்
- Technology பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
விஜய் பேசிய அந்த ஒரு விஷயம்.. கட் செய்ய சொன்ன இயக்குனர் அட்லி.. பின்னணியில் நடந்தது என்ன?
சென்னையில் விபத்தில் பலியான சுபஸ்ரீ குறித்து நடிகர் விஜய் பேசியதில் பெரும்பகுதியை கட் செய்துவிட்டதாக ரசிகர்கள் கொந்தளித்து உள்ளனர்.
Recommended Video
சென்னை: சென்னையில் விபத்தில் பலியான சுபஸ்ரீ குறித்து நடிகர் விஜய் பேசியதில் பெரும்பகுதியை கட் செய்துவிட்டதாக ரசிகர்கள் கொந்தளித்து உள்ளனர்.
நடிகர் விஜய் நடித்துள்ள பிகில் படம் வரும் தீபாவளிக்கு வெளியாகிறது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா கடந்த வாரம் சென்னையில் நடந்தது. இந்த விழா நேற்று தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.
என்ன பேசினார்
இந்த நிலையில் எல்லோரும் எதிர்பார்த்தது போலவே நடிகர் விஜய் இந்த நிகழ்ச்சியில் பேனர் பிரச்சனை தொடங்கி பல்வேறு சமூக பிரச்சனைகள் குறித்து விளக்கினார். விஜய் தனது பேச்சில், பேனர் விழுந்து, லாரி ஏறி சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் நிறைய விஷயங்கள் நடந்து விட்டது.
செய்யவில்லை
இதில் யார் மீது கோவப்பட வேண்டுமோ அவர்கள் மீது யாருமே கோபம் கொள்ளவில்லை. தேவையில்லாமல் லாரி டிரைவர் மீதும் பேனர் அச்சடித்தவர் மீதும் புகார் கூறுகிறார்கள். இவர்களுக்கு எதிராக நீங்கள் ஹேஷ்டேக் போடுவீர்கள் என்று நம்புகிறேன். சமூக வலைத்தளங்களை நல்ல விஷயங்களுக்காக பயன்படுத்த வேண்டும்., என்று குறிப்பிட்டார்.
ஆனால் என்ன
ஆனால் விஜய் பேசியதில், தேவையில்லாமல் லாரி டிரைவர் மீதும் பேனர் அச்சடித்தவர் மீதும் புகார் கூறுகிறார்கள். கைது செய்ய வேண்டியவர்களை கைது செய்யவில்லை, என்று வாசகத்தை நேற்று கட் செய்துவிட்டார்கள். நேற்று டிவியில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பான போது இந்த வாசகம் வரவே இல்லை.
ரசிகர்கள் கோபம்
இதையடுத்து நேற்று ரசிகர்கள் இணையத்தில் இதனால் கோபம் அடைந்தனர். ஏன் விஜய் பேசிய அந்த வசனத்தை கட் செய்தீர்கள். விழாவில் நடந்த மிக முக்கியமான விஷயமே அதுதான். அதை ஏன் கட் செய்துவிட்டு ஒளிபரப்புனீர்கள் என்று கேள்வி எழுப்பினார்கள்.
இயக்குனர் தரப்பு
இயக்குனர் தரப்புதான் இப்படி கட் செய்ய சொன்னதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. அந்த குறிப்பிட்ட வார்த்தைகளை ஒளிபரப்ப வேண்டாம் என்று இயக்குனர் அட்லிதான் கேட்டுக்கொண்டார். அவரும் தயாரிப்பாளர் தரப்பும் கேட்ட பின்தான் இதை கட் செய்து ஒளிபரப்பியதாக கூறுகிறார்கள்.
சர்ச்சை அழுத்தம்
தேவையில்லாத சிக்கல் மற்றும் சர்ச்சை வேண்டாம் என்று படக்குழு கருதியதால் இப்படி கட் செய்ததாக பேசிக்கொள்கிறார்கள். அதேபோல் படக்குழுவிற்கு இது தொடர்பாக அழுத்தங்கள் தரப்பட்டு இருக்கலாம் என்றும் கூறுகிறார்கள் .
-
பேயாட்டம்!.. கில்லி படத்தை பார்த்துட்டு தியேட்டரில் பெண்கள் பார்த்த வேலை.. பசங்களே மிரண்டுட்டாங்க!
-
ஒரே டிப்ரெஷன்.. வாழ்க்கையே போச்சு.. தப்பான முடிவை எடுக்க பார்த்த நடிகை.. சட்டென திறந்த கதவு!
-
இது ஆக்ஷன் மேடம்.. சீரியல் நடிகை சசிலயா துளசி மாடத்தை என்ன டிரெஸ் போட்டு சுத்துறாரு பாருங்க!