Don't Miss!
- News தேவ கவுடா காலத்தில் தொடங்கிய சினிமாவை மிஞ்சும் 40 ஆண்டுகால அரசியல் பகை.. ஹாசனில் மோதும் 'பேரன்கள்'!
- Finance வீட்டுக் கடன்: EMI செலுத்தாட்டி, வீடு ஏலம் விடப்படுமா? RBI சொல்வது என்ன? வங்கிகளின் அதிகாரம் என்ன?
- Technology கைக்கு 2 ஆர்டர்.. அவ்ளோ கம்மி.. AMOLED டிஸ்பிளே.. ப்ளூடூத் காலிங்.. ஹெல்த் டிராக்கர்கள்.. எந்த மாடல்?
- Sports இதுதான் ரியல் ட்விஸ்ட்.. ஓய்வுக்கு பின் சிஎஸ்கே அணியின் முக்கிய பதவிக்கு வரப்போகும் தல தோனி?
- Automobiles தண்ணீரை சேமிக்க இப்படி ஒரு வழியா? இனி ரயில்களில் 1லிக்கு பதிலாக 500 மிலி தண்ணீர் மட்டும் வழங்க முடிவு!
- Lifestyle கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
சுபஸ்ரீ மரணத்தால் கொந்தளித்த விஜய்.. ரசிகர்களுக்கு வைத்த வேண்டுகோள்.. களமிறங்கும் பெரும் படை!
சென்னையில் விபத்தில் பலியான சுபஸ்ரீ குறித்து நடிகர் விஜய் பேசியது அவரின் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
Recommended Video
சென்னை: சென்னையில் விபத்தில் பலியான சுபஸ்ரீ குறித்து நடிகர் விஜய் பேசியது அவரின் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
நடிகர் விஜய் நடித்துள்ள பிகில் படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது.
இந்த நிலையில் எல்லோரும் எதிர்பார்த்தது போலவே நடிகர் விஜய் இந்த நிகழ்ச்சியில் பேனர் பிரச்சனை தொடங்கி பல்வேறு சமூக பிரச்சனைகள் குறித்து விளக்கினார்.
அவ்வளவு சொல்லியும் செய்யல.. நயன்தாரா கடைசியில் இப்படி பண்ணிட்டாங்களே.. கடுப்பில் பிகில் படக்குழு!
என்ன சொன்னார்
நடிகர் விஜய் தனது பேச்சில், பேனர் விழுந்து, லாரி ஏறி சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் நிறைய விஷயங்கள் நடந்து விட்டது. இதில் யார் மீது கோவப்பட வேண்டுமோ அவர்கள் மீது யாருமே கோபம் கொள்ளவில்லை. தேவையில்லாமல் லாரி டிரைவர் மீதும் பேனர் அச்சடித்தவர் மீதும் புகார் கூறுகிறார்கள்.
ஆனால் என்ன
இவர்களுக்கு எதிராக நீங்கள் ஹேஷ்டேக் போடுவீர்கள் என்று நம்புகிறேன். சமூக வலைத்தளங்களை நல்ல விஷயங்களுக்காக பயன்படுத்த வேண்டும். சமூக வலைத்தளங்கள் மூலம் நாம் போராட வேண்டும். சமுதாயத்தின் நலனுக்காக நீங்கள் குரல் கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
அரசியல் எப்படி
அரசியலில் புகுந்து நிறைய விளையாடுங்கள், விளையாட்டில் அரசியலை கொண்டு வராதீர்கள். என்று குறிப்பிட்டார். இந்த நிலையில் நடிகர் விஜயின் இந்த பேச்சை ரசிகர்கள் மிகவும் சீரியசாக எடுத்துக்கொண்டு செயல்பட இருக்கிறார்கள்.
விஜய் என்ன சொன்னார்
ஆம் விஜய் சொன்னது போலவே சுபஸ்ரீ பிரச்சனையை அவர்கள் சமூக வலைதளத்தில் எழுப்பி இருக்கிறார்களாம். சுபஸ்ரீ பிரச்சனை தொடர்பாக ஹேஸ்டேக் உருவாக்கி அதை டிரெண்ட் செய்ய திட்டமிட்டு இருக்கிறார்களாம். விரைவில் இதுகுறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்கிறார்கள்.
பேனர் அரசியல்
விஜய் பேனர் வைக்க வேண்டாம் என்று கூறிய உடன் அதை பின்பற்றி பேனர் வைக்காமல் இருந்தனர் அவரது ரசிகர்கள். தற்போது அவர் சொன்னது போலவே சமுதாய பிரச்சனைகளை பற்றி பேசுவதற்காக நடிகர் விஜயின் ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் போராட்டம் செய்ய முடிவு செய்துள்ளனர் என்கிறார்கள். அதாவது விஜய் படங்களை டிரெண்ட் செய்வது போலவே இனி சமுதாய பிரச்சனைக்கு குரல் கொடுக்க உள்ளனராம்.