Don't Miss!
- Finance CHATGPT முதல் இந்திய ஊழியரை நியமித்தது.. யார் இந்த பிரக்யா மிஸ்ரா..?
- Technology ஆர்டர் பிச்சிக்கும் பாருங்க.. ரூ.10,000 போதும்.. 108MP கேமரா.. 256GB மெமரி.. வருகிறது itel போன்.. எந்த மாடல்?
- News 2019 vs 2024: 35 தொகுதிகளில் வாக்குப்பதிவு கடும் சரிவு.. 4 தொகுதிகளில் மட்டும் உயர்வு.. எங்கெங்கு?
- Lifestyle தக்காளி சட்னி செய்யும் போது இந்த ஒரு பொருளை மட்டும் அதிகமா சேர்த்துக்கோங்க.. டேஸ்ட் சூப்பரா இருக்கும்..
- Sports மொத்த பேட்டிங் ஆர்டரும் மாறிப்போச்சு.. ருதுராஜ் செய்த சொதப்பல்.. சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன?
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
பிகில் இசை வெளியீட்டு விழா... ரசிகர்களுக்கு விஜய் முக்கிய உத்தரவு!
ரசிகர்கள் யாரும் பேனர் தனக்கு வைக்க வேண்டாம் என நடிகர் விஜய் கேட்டுக்கொண்டுள்ளார்.
Recommended Video
சென்னை: தனது பிகில் பட இசை வெளியீட்டு விழாவின் போது ரசிகர்கள் யாரும் பேனர் வைக்க வேண்டாம் என நடிகர் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த இளம்பெண் சுபஸ்ரீ பிடெக் பட்டதாவியாவார். இவர் கனடா நாட்டில் மேற்படிப்பு படிப்பதற்காக தகுதி தேர்வை எழுதிவிட்டு அதன் முடிவுகளுக்காக காத்திருந்தார்.
இந்நிலையில் நேற்று அவர் இருசக்கர வாகனத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த போது, பள்ளிகரணை செல்லும் வழியில் எதிர்பாராதவிதமாக விபத்தில் மரணமடைந்தார். சாலையோரம் வைக்கப்பட்டிருந்த பேனர் ஒன்று சுபஸ்ரீ மீது சரிந்து விழுந்ததே விபத்துக்கு காரணம்.
சுபஸ்ரீ மீது பேனர் சரிந்து விழந்ததில் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது அவ்வழியாக வந்த தண்ணீர் லாரி அவர் மீது ஏறி இறங்கியதில் அப்பெண் சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டார். இதையடுத்து பேனர் கலாசாரத்தை ஒழிக்க வேண்டும் என்ற குரல்கள் ஒலித்து வருகின்றன. அரசியல் தலைவர்களும் தங்களது கட்சி தொண்டர்களிடம் பேனர் வைக்க வேண்டாம் என அறிவுறுத்தி வருகின்றனர்.
Namma Veettu Pillai Trailer: ஒரு தடவை ஜெயிச்சா பத்தாது.. ஒவ்வொரு தடவையும் ஜெயிக்கணும்.. சிவா மாஸ்!
இந்நிலையில் நடிகர் விஜய்யும் இதுதொடர்பாக தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை முன்வைத்துள்ளார். அதில், இனி தனது பட விழாக்களின் போது ரசிகர்கள் யாரும் பேனர்கள் வைக்க வேண்டாம் என அவர் அறிவுறுத்தியுள்ளார். குறிப்பாக வரும் 19ம் தேதி சென்னையில் நடைபெற உள்ள தனது பிகில் பட இசை வெளியீட்டு விழாவின் போது ரசிகர்கள் யாரும் சாலையில் பேனர் வைக்க கூடாது என விஜய் தெரிவித்துள்ளார்.